இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 40 காட்சி 6
இடம் : பெங்களுர் வங்கி நேரம் : முற்பகல் 11 மணி உறுப்பினர் : நெடுமுடி, அம்ரிதா
நெடுமுடி தில்லியிலிருந்து மாறுதல் பெற்று பெங்களூர் வந்து, மாநகரக் காவல்துறைத் துணை ஆணையராகப் பொறுப்பேற்கிறான். ஒருநாள் காசோலை மாற்றுவதற்காக அரசு வங்கிக்குச் செல்லுகிறான். வங்கிக் காசாளராக அமர்ந்திருந்த பெண், அவனது காசோலையைக் கையில் வாங்கிக் கொண்டு அவனையே உற்றுப்பார்க்கிறாள், அப்பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் அம்ரிதா, என்ற சொல் அவன் வாயிலிருந்து குதித்து வெளிவருகிறது. நெடுமுடி:
அம்ரிதா! அம்ரிதா:
நீங்கள்.இங்கே..? நெடுமுடி:
நிலவு
பலகணிக்கு அருகிலேயே
வந்துவிட்டது.
நான
இங்கு தான் பணிபுரிகிறேன்,
நீ எப்படி. அம்ரிதா:
நிலவு
தன் பயணத்தில்
இளைப்பாறுவதற்காக
நின்றது. அவ்வளவுதான்.