இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வயிற்றுப் பா(ட்)டு
❖
என்னை யாரோ
என்று நினைத்துப்
புலவன் ஒருவன்
புகழத் தொடங்கினான்:
'நீண்ட கண்கள்
கூரிய நாசி
அகன்ற நெற்றி
அழகிய பற்கள்
வயிரத்தோள்கள்
மலைபோல் மார்பு,
தொடரவிடாமல்
இடையில் பாய்ந்தேன்:
'ஒகோஉனக்கு
ஒட்டிய வயிறு
போலும்...'
22