சொக்கநாத மாலை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

மாயூரம் முத்துசாமிப்பிள்ளை இயற்றிய சொக்கநாத மாலை.

திருச்சிற்றம்பலம். திருக்கைலாயபரம்பரைத்தருமபுரவாதீனமடாலயத்தில் எழுந்தருளியிருக்கும் சொக்கநாதமாலை.

இஃது திரிசிரபுரமகாவித்துவான் மகா--ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் மாணாக்கருளொருவராகிய மாயூரம் முத்துசாமிப்பிள்ளை இயற்றியது.

திருப்பனந்தாள்காசி மடாதீனபதி காசிவாசி ஸ்ரீ சாமிநாத சாமிகள் ஆக்ஞைப்படி தருமை ஆறுமுகவோதுவாமூர்த்திகளால் கும்பகோணம் ஸ்ரீவிந்தியாஅச்சியந்திர சாலையில் அச்சிற்பதிக்கப்பட்டன. விஜய-ஸ்ரீ ஐப்பசி மாதம் , 1893

-
பரம்பரைத்திருநாமம் பரிபூரணமானஸ்தலம் மாதம் - பட்சம் - திதி
மெய்கண்டதேவர் திருவெண்ணெய் நலூர் ஐப்பசி -- சுக்கி --பிரதமை
அருணந்தி சிவாசாரியார் துறையூர் புரட்டாசி -- திரு --திரயோதசி
மறைஞானசம்பந்தர் திருக்களாச்சேரி ஆவணி -- சுக்கி --துதியை
உமாபதி சிவாசாரியார் கொற்றவன்குடி சித்திரை-- சுக்கி -- துவாதசி
அருணமச்சிவாயர் கொற்றவன்குடி மார்கழி -- சுக்கி --பௌரணிமி
கங்கைமெய்கண்டார் சீர்காழி கார்த்தி -- கிரு --பஞ்சமி
பழுதைகட்டிச்சிற்றம்பசுவர் மதுரை பங்குனி -- கிரு --நவமி
பழுதைகட்டிஞானப்ரகாசர் காளத்தி ஐப்பசி -- கிரு -- சதுர்த்தி
ஞானப்ரகாசர் திருவாரூர் ஐப்பசி -- கிரு -- சஷ்டி
ஞானசம்பந்த தேசிகர் தருமை வைகாசி -- கிரு --சத்தமி
ஆனந்த பரவச தேசிகர் தருமை மார்கழி -- கிரு --திருதிகை
சச்சிதானந்த தேசிகர் தருமை ஆனி -- சுக்கி -- சத்தமி
மாசிலாமணி தேசிகர் தருமை புரட்டாசி-- சுக்கி --ஏகாதசி
ஞானசம்பந்த தேசிகர் தருமை ஆவணி -- சுக்கி --துதியை
திருஞானசம்பந்த தேசிகர் திருக்குற்றாலம் சித்திரை -- கிரு --பிரதமை
திருவம்பலதேசிகர் தருமை ஐப்பசி -- சுக்கி --பௌர்ணிமி
அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் கோட்டூர் கார்த்தி -- சுக்கி ஏகாதசி
திருநாவுக்கரசுதேசிகர் தருமை ஐப்பசி -- சுக்கி பௌர்ணமி
சச்சிதானந்த தேசிகர் தருமை மார்கழி -- சுக்கி -- தசமி
ஞானசம்பந்த தேசிகர் தருமை ஆவணி -- கிரு -- ஏகாதசி
கந்தப்பதேசிகர் தருமை ஆவணி -- கிரு -- நவமி
மாசிலாமணி தேசிகர் தருமை தை -- கிரு -- சஷ்டி
சச்சிதானந்த தேசிகர் சிவசைலம் கார்த்தி -- சுக்கி --துவாதசி
மாணிக்கவாசகதேசிகர் திருபுவனம் மாசி -- கிரு --சதுர்த்தி

திருச்சிற்றம்பலம்

தருமைச் சொக்கநாத மாலை[தொகு]

காப்பு[தொகு]

சீர்மலியாகாமியமுரற்காலாற்சிதறிடச்செய்துமுன்னுள் ள
பேர்மலிசஞ்சிதந்தனைவாயிற்பெய்துநல்லருளினிற்கூட்டு ம்
வார்மலிசித்தியானையின்பாதமனத்தினிலிருத்தியேபணிவா ஞ்
சூர்மலிதருமைச்சொக்கநாதன்சீர்சொற்றெரிநதுரைத்திடத்தா னே

நூல்[தொகு]

பொன்னமாலரவின்பள்ளியான்வனசப்போதில்வாழ்நான்முகனென் று
மன்னமர்கற்பதருநிழலிருப்பான்வணங்கிநின்றனுதினமேத்த ந்
தென்னமாமரர்நின்றுவாழ்த்தெடுப்பத்தெய்வஞானப்பரஞ்சுடராய் த்
துன்னமர்ந்தனையாலருள்புரிதருமைச்சொக்கநாதப்பரசிவமே 1

இந்நிலம்பரவவாழ்மணவூரிலிணையிலாப்புகழ்த்தனஞ்சயனா ர்
தன்னகமகிழக்கடம்படித்தோற்றித்தழைத்தநீஞானசம்பந் த
மன்னியதேசிகன்காத்துவந்துமருவினையாதுகாரண மோ
சொன்னியமாதிமுநிவர்சூழ்தருமைசொக்கநாதப்பரசிவமே. 2

சென்றிடுதிருமுகத்தொடுபாண்பத்திரனையுமஞ்சைமாக்களத் தி
ளின்றிடச்செய்ததன்மைமாறிடற்காநீடருண்ஞானசம்பந் த
மென்றிடுநந்தேசிகனோடுநீயுமெழிலமாகமலையம்பதியி ற்
றுன்றிநின்றுவந்துவந்தனைதருமைச்சொக்கநாதப்பரமசிவமே 3

சிவைபிரிந்தரசன்மகளெனச்சென்றதிறந்தனைமனத்தினினினைத் தோ
நவைபிரியாதவுலகவர்காணஞானத்தைவெளிப்படுத்திட வோ
விவைபிரியாதநீயிவண்விரும்பியெழுந்தருளினைமிகுமதுர ச்
சுவைபிரியாதகனிபொழிற்றருமைச்சொக்கநாதப்பரமசிவமே 4

இளையவன்மயில்வாகனனமர்கடம்பென்றெண்ணியீசானமாந்திசையி ல்
வளையமாலுரவனந்தனினாப்பண்வரமுநிவரர்புடைசூழ க்
கனையவான்மாக்கட்கருளுருக்காட்டக்கருதியேவந்தனைபோலு ஞ்
சுளையமர்கனியார்பொழிலுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 5

சங்கமமடையாநதிக்கரையதனிற்றங்குதறகாதெனக்குறிதிது த்
திங்களார்சோலைநாற்றிசைபரவுந்திருமயிலைப்பதியின்கீழ் ப்
பங்கனுக்கருளும்பொன்னிநன்னதியினபக்கல்வீற்றிருந்தனைபோலு
துங்கமாராதிசைவர்சூழதருமைச்சொக்கநாதபரசிவமே 6

தெருவினிற்கூடைமண்ணெடுத்துழன்றசெயலுடைநின்னுருவத்தை ப்
பெருமனமுடையராகண்டிடாதிருக்கப்பேணியோதிசையறிந்திடிலு க்
கருமைஞ்சோலைநாபபணிலேவநதமாநதனையென்றுசூழபோகா த்
துருமமவிண்ணுலகின்மருவிடுந்தருமைச்சொக்கநாதபரசிவமே 7

ஆக்குபாண்டியனுங்கைதவனெனும்பேரடைந்தவனாடெனத்தெரிந் தோ
வாக்குரைமுன்னங்கொடுத்ததுமுண்டோவளவாநாடியற்றுபுண்ணிய மோ
நீக்குமதில்லாதிநாகாவதியநினைந்தனையெனதுபுண்ணியமே
தூக்குரைவாணாபோற்றிடுந்தருமைச்சொக்கநாத பரசிவமே 8

அருமையிற்சுயம்புகாணநதைவீசமாரிடமானுடமென்னு ம்
பெருமையினைநதாமிலிங்கமென்றுலகிற்பேசுவரவையொடுகலக த
கருமையிறபொலியுங்கண்டாதநததனாறகவருனைமுதலென் றே
துருமையிறபொங்கசூழநதிநெடுதருமைச்சொக்கநாதப்பரசிவமே 9

உலகுளோர்தவத்தின்றகையமிவவாடுறனறுவந்தறிந்திட நினைத்தோ நீ
யலகிலாசசோலைநடுவினில்விரும்பியமாந்தறிஞானசம்பந்த ம
விலகுறாத்தேசிகனைத்தவம்புரியவிடுத்தனைசொல்லுநின்னரு ளே
சுலவிடவிளங்கும்ப்புகழுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 10

கதிமருவியபஞ்சவனெனுங்குலசேகரன்மைத்தீட்டவாலையமா ம்
பதிமருவியநீசென்னிநாடென்றுபாக்கியமுடைத்தெனவறிந் தோ
நிதிமருவியவிந்நகரிலோர்வளவனிறுததியதளிமருவினையா ற்
றுதிமருவிய சீர்பதிவுறுநதருமைச்சொக்கநாதப்பரசிவமே. 11

படியிலாச்சிவராத்திரியபிடேகம்பண்ணுதற்கிலையெனத்தென் னை
யடியினினின்றமுநிவரன்களிப்பிலாழ்ந்திடவளைந்தவன்கரத்தி ன்
முடியினைக்கொடுக்கப்பறித்துனக்காட்டிமொழிந்திடச்செய்தனைநிதமு ந்
துடியெறியலையார்பொன்னிசூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 12

மூடுதலில்லாச்சுவரின்மேல்வைத்தமுதிர்தலையுற்றிடர்விளநீ ர்
தேடுறுகன்னல்சந்தனக்கட்டைதிரவியமிவையெடுத்தற் கு
நாடுறச்சிருவனிலையெனவதுவுநடந்திடச்செய்தனைசூழ்ந் து
தோடுலாம்வாவிமாடமர்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 13

நின்னதுபூசைக்கெனமனத்தெண்ணிநிறுத்தியகதலியின்றாற் றை
மன்னமர்வாளாற்குறைத்தவன்காததைவளைந்துபாம்பிருந்தவனோடு ம்
பன்னுமவ்வண்ணஞ்சந்நிதிவரவேபாறிடச்செய்தனைநாளு ஞ்
சொன்னுவல்வன்னிசேர்பொழிற்றருமைச்சொக்கநாதப்பரசிவமே 14

ஆட்டுதல்குறித்துவந்தவானெய்யையாசையிலெடுத்ததுநிரம் ப
வீட்டுமெண்ணெய்யைக்கலந்தவன்பேசாதிருந்ததுகண்டவன்மனை வி
தாட்டுணைவிரும்பிச்சந்நிதிகொணர்ந்துசாறறவும்பேசிடச்செய்தா ய்
தோட்டுனைதட்டுமல்லர்சூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 15

பாலிடநீரைக்கலந்தனித்தவடன்பாலனைப்பரும்பிணிசேர்ந் து
கோலிடவதனைப்பின்னருதெரிந்துன்குரைகழறியானத்தில்வைத் து
மேலிடமூன்றுபசுக்களைக்கொடுத்துவேண்டிடத்தீர்த்தனைபொழிலி ற்
சூலிடங்கொண்டமுகிலுலாந்தருமைச்சொக்கநாதப்பரசிவ மே 16

முழவெனத்தடித்துநீறுதோய்காயைமுன்னுநின்றனக்கெனமனையி ன்
கிழவியால்விடுக்கவஃதறியாதகிழவனாலெடுத்தரிநதிடலு ம்
பழமறைசொலுமோரிலிங்கமுள்ளிருக்கப்பார்த்துடனஞ்சிநின்முன்ன ர்
துழலிடச்செய்யவருளினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 17

மரந்தனிற்காயவைத்தசெங்காவிமருவியமடிதனையெடுத்து ப்
புரந்தனிலணிந்துவந்தவன்றேகம்புழுநெளிநதிடவுடனடுங்கி ச்
சிரந்தனிலேற்றுன்சந்நிதிவரவுஞ்செய்யமேனியனெத்திகழ த்
துரந்தரனாக்கிப்பார்த்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 18

புலியுமோராவுநட்பொடுவாலிபுகுந்தநீருண்டுடனடந் து
நலிவிலாவகையிலோர்பொழிற்சேக்கைநயந்துவாழ்ந்திருந்தனகண் ட
வலியவரன்றுமுதலுபசாரவகையினினிறகவேசெய்தா ய்
சொலிவருவாணர்கலியசறருமைச்சொக்கநாதப்பரசிவமே 19

வீற்றிருந்தருளுக்கோயிலின்வாயின்மேதியின்சாணநீர்கைக்கொ ண்
டூற்றியபின்னரலகிடநினைத்தவொருததியின்கரமுடன்மடங் கி
நாற்றிசையறியநின்றிடச்செய்தாய்நாற்கவிப்புலவர்கள்சூழு ர்
தூற்றிலிமையாப்புகழுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 20

நித்தியவமலபூரணவதுலநின்மலவென்றுரைத்தேத்திப்
பத்தியார்முகன்மூன்றுநாணினது பாதமேகதியெனப்படுத்துன்
மத்தனாயிருக்கப்பின்னினைத்துதித்துமகிழ்ந்திடவாக்களித்தனையாற்
சுத்தநீரேரி சூழஅநந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 21

நின்னிலைகாணவேண்டுமென்றகத்தினினைத்துமாமிசந்தனையாணந்
தன்னிலையாக்கியனத்தொடுங்கலந்துகாற்றுநிவேதனமாக
நன்னிலைவைத்துநின்றவன்காணநல்லுயிர்பெற்றெழச்செய்தாய்
சொன்னிலையுள்ளாளு*ரைப்பருந்தமைச்சொக்கநாதப்பரசிவமே 22

சேழ்கிளர்கடம்பவனத்திற்சொற்கொள்ளாக்கீரனைமடுவில்வீழ்த்தியபோல்
வாழ்ந்திடவடியாரியறறிடுதளியைமறைத்தவனற்றைநாளந்தி
யாழ்ந்தநீர்க்கூவம்வீழ்ந்தழிந்திடவேயாக்கினைநின்னருளறிந்தார்
சூழ்ந்தொளிர்மதிலின்முகில்பொழிதருமைச்சொக்கநாதப்பரசிவமே 23

வலவனிராசேந்திரன்மனங்களிக்கமதுரையிலுரைபகர்ந்ததுபோற்
பலரிருந்தாலென்சொல்லுமானந்தபரவசற்றேசிகனாக்கல்
கலமெனஞானசம்பந்ததேசிகருக்குநல்லுரைபகர்ந்தனையே
சோலமிளிர்மறையோர்வாழ்ந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 24

ஆசிரியன்றன்மனைவியைப்புணரவாசைகொண்டவள்கரம்பிடித்த
நீசன்கைவெட்டிமதுரையின்முடித்தநீதியனீயெனற்கேற்ப
சூசுகமுலையைப்புகழ்ந்தவன்கரமுந்துணிபடக்கிடந்தகாரணத்தாற்
றூசிலாவருளைக்காட்டினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 25

செல்லிடுமனந்தகுணன்றனக்காகச்சிரமதியமுதத்தாலுயிர்கள்
வில்லிடமதுரைச்சுத்திசெய்ததுபோல்லிரைமலாவாவிகூவங்கள்
கல்லிடந்தோறுமுறுமுவர்நீக்கிக்காட்டினையென்றுபின்னோருஞ்
சொல்லிடவருளைச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 26

பாண்டியன்களிக்கமறைந்துளமதுரைப்பதிதனைக்கங்கணப்பணியாற்
காண்டரவளைந்துகாட்டியதுபோற்கருதருமிகநகரதனி
லீண்டியநாலுமூலையில்வில்வமிருந்திடுமெல்லையிற்றளியுந்
தூண்டலிலமைக்கவோதினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 27

வந்தவரிருக்கப்பலகையொன்றினைநீவழங்கினைமதுரைமாநகரின்
முந்தவென்றுரைப்பராலதுபோலமூன்றுபேர்நின்றிடமுடியா
துந்தியதளியிற்சந்தைவந்திருக்கவுதவினைவாரிவெள்ளத்திற்
சுந்தரமுநிவருவந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 28

கூர்மலிதருமியென்றவன்மகிழக்கொங்குதேர்வாழ்க்கையையெழு தி
யார்முழுதறியமதுரையிற்கொடுத்தாயானந்தபரவசருக்கு ஞ்
சீர்வளர்சச்சிதானந்தற்பின்னாந்தேசிகனாக்கெனக்ககன ஞ்
சோர்விலாவுரையுந்தந்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே. 29

தெற்றியிற்காயத்திரிவிசேடத்தைச்செப்பியும்பின்னினைத்தூற் ற
லுற்றவனாகவும்புரளுதலில்லாதுற்றிடச்செய்தனைபுரத்தை ச்
செற்றவன்றானுமிலிங்கமென்றுரைத்தார்சீரறச்சாலைகளெங்கு ந்
துற்றசீரடியார்நிறைந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே. 30

பறிதலையமணர்மகத்தினிலெழுந்தபாம்பினைமதுரையிற்கொன் ற
குறியவனீதானென்றுலகறியக்கூடியவைந்தலையரவ ஞ்
செறிந்துநின்முன்னர்படம்விரித்தாடச்செய்தனையதுவுமற்புத மே
துறக்கமென்றியாருமறைந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே. 31

உன்கலந்தெருவிற்கிடந்ததைத்திரட்டியொருகரத்தெடுத்துவந்துன்றன்
திண்டளியதனிற்கிடத்தியமடந்தைதிகைத்ததிற்சிதறிடுமனத்தை க்
கண்டெடுத்துண்ணச்செய்தனையதனாற்கருதிநீசிவமெனநினைத்து த்
துண்ணெனநின்றுதுதித்தனர்தருமைச்சொக்கநாதப்பரசிவமே. 32

கூடலினின்னோடெதிர்த்தகீரனையுங்குணமுறப்பொதிகையில்வாழு ம்
விடருண்முநிவற்கொண்டுபதேசம்விரித்தபோன்மாசிலாமணியா க்
கூடுதேசிகனைக்கொண்டிவண்குமரகுருபரற்கருளினைநிலவு ந்
தோடலர்ந்தொளிரும்பண்ணைசூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே. 33

இரவினிற்குமரகுருபரன்யோகிலிருந்திடுபோதடைந்தவனை த்
தரமொடுமழைத்துச்சென்றுகேதாரத்தலத்தினில்விடுத்தனையதனா ன்
மரமுதனீக்கிக்குறிதனைக்கண்டுமகிழ்ந்துமோர்தளிநினக்கென்று ஞ்
சுரமலிநகரினிறுவினன்றருமைச்சொக்கநாதப்பரசிவமே. 34

வருணனைமுன்னர்க்கடிந்துடனவன்றன்வயிற்றுறுநோய்தனைநீக்கி த்
திருமலிகூடன்மருவியவதுபொற்செப்புமேழ்நாணினைநாடி த்
தருமிளிரன்பாற்படுத்துவாழ்த்தினவன்றாங்குதற்கரியவவ்வலியை த்
துருவிடாவண்ணந்தீர்த்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 35

புட்கலாவர்த்தந்தன்னையேகொண்டுபொருமதுராபுரியழிக் க
விட்குலங்கதுவவந்தநற்கடலைவிலக்கியதன்மையைமா ன
தட்குணப்பொன்னிநீரையிவ்வில்வந்தடுக்குமென்றுரைத்தளித்ததனா ற்
றுட்கர மின்றியமர்ந்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 36

விளங்குநன்மதுரைக்கவுரிகண்களிக்கவிருத்தகுமாரபாலகனா க்
களங்கமிலாமற்கொண்டனையென்றுகரைவதற்கேற்பவிநநக ரி
லுளமகிழ்மாசிலாமணிமுன்னமுருவொடுஞ்சென்றுநின்றோதி த்
துளங்கிலாவகையினமறைந்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 37

ஈனசம்பந்தம்விலகியேவாழ்தலியல்பெனநின்னடிபேணி
மோனசம்பந்தங்கொண்டதுதெரிந்தோமுன்னாபோற்றோத்திரஞ்செய்ய
ஞானசம்பந்தப்பெயர்கொடுத்தருளினாட்டெனக்கனவிடைப்பணித்தாய்
தூனசம்பந்தமில்லாசூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 38

கடந்தனைத்தோண்மேல்வைத்தொருகரத்தாற்கவ்வியுமற்றொருசரத்தின்
படம்விரல்கொண்டுசெம்பினீரோடுபரித்தவனின்றளிவா ச
லிடமிளிர்ந்கதவந்திறந்திடக்காலினிருவிரல்கொண்டுதள்ளிடவு ந்
தொடர்விரலெடுக்காதருளினைதருமைச்சொக்கநாதபரசிவமே 39

சிவநிசிதினத்திலிரவெலாம்விழித்ததேகனாலாலதுசா ம
நவநிறைகூவந்தனிறசலமெடுக்கநண்ணினனதில்விழுந்தவனை த்
தவமலிகீரன்றனைக்கரையேற்றித்தந்தபோற்கரையினில்விடுத் த
துவறலையறியச்ச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவ மே 40

பொருவில்வேளூர்க்குச்சென்றவோர்முநிவன்போலவேலவினைஞரைவிளித்துத்
திருமலிநந்தனைத்திடையடைந்துசிறப்பினோடலரெலரங்கொண் டு
பெருமகிழ்வோடுபூசைமண்டபத்திற்பிறங்கிடவைத்தனையெண்ணி த்
துருவனும்பணியும்புகழுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே... 41

மேவியபதினாறாமொடுக்கத்தில்விழைந்தவரும்பதினறுவ ர்
தாவியமோனங்கொண்டிருப்பதனாற்றங்கறைவாசலினிதமு ம்
பாவியவன்னம்வைத்திடவேண்டிப்பகாதிருஞாசம்பந்த ர்
றூவியன்சேழ்க்கச்சொற்றனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 42

கடையுகமென்றுநினைந்திடமழையுங்கான்றகாலததின்மதுரை ப்
படையிலிற்பலகையொன்றினைப்பாடும்பத்திரற்களித்ததுபுரைய த்
தடையிலம்மழையேயிலதெனக்கருத்திச்சந்நிதிநின்றன்துதிக்க த்
தொடைக்ககரநீட்டிலிலக்கினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 43

ஆயகருங்குருவிகேட்டிடநீமூன்றட்சரஞ்செவியினிலோத ப்
போய்கடம்படியிலிருந்துபின்னருளிற்புகுத்தியதன்மையைமான
வாயமலர்ந்துரைக்கும்பைங்கிளிக்கைந்தாம்வகையெழுத்துரைத்துனதடியிற்
றோய்ந்திடச்செய்துமாண்டனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே.. 44

தறையினின்மைசூர்க்கர்த்தர்பாற்சென்றசம்பந்தசரணரானின் னை
முறையொடுமொதக்கேட்டபிடேகமுறையினிலாகெனக்கரு தி
மிறையினில்வருடந்தொறும்பசுவனுப்பல்விழைகுவானருளினைவாவி த்
துறைதொறுஞ்சங்கமுலவிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 45

திகழ்திருவனந்தலதிலபிடேகஞ்செய்தற்குப்பெருகினையமைக்க ப்
பகபர்சுவினையேகறந்துவந்திருந்தபாலினையெடுத்துவாய்ப்பெய் த
வகையினிலவையலமமசையாதுவகுத்தனைநினைத்துதித்தென்று ஞ்
சுகர்முதற்பணியும்புகழுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 46

கணையெனுங்கண்ணார்பெண்களிலிருவர்கடம்பமானைந்தனிற்கொண் ட
விணையிலாயாழின்வாதினைநீகேட்டின்புறவுரைத்தவென்றியைப்போ ற்
பணையுளமுநிவர்கலகங்கொள்போதிற்பகர்திருவம்பலவன்றா ன்
றுணையெனச்சொல்லிமறைந்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 47

பெரியவன்சுவர்க்கபுரத்தமர்முநிவன்பேசிடுநமதுகோமுகை யி
லுரியநீர்சிரசிற்றாங்கியேநெருநலுவனவணடைந்துளானதனா ற்
பிரியமோடதனைப்பாதலம்பொக்கப்பிரித்ததன்வேலையைமுடித்து த்
துரியராவாழ்கவென்றனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 48

கிளையொடுசுவர்க்கபுரத்தவர்கூடிக்கேழகிலரிரதம்வீற்றிருக்கு ந்
தளையவிழிலிங்கமெடுத்திடவந்ததன்மையிற்சித்திநாயகனா ர்
விளைவழிகூடியிருந்தனரென்றுவிழிதுயில்தனையுநீக்கி த்
துளையமர்காதிலோதினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே. 49

விழையிலான்கறந்தபாலினிலெடுத்தவெண்ணெயென்றொருவனாற்சுட்டுக்
குழைவினிற்றந்தசாந்தினைநினக்குக்கோலமார்நிவேதனஞ்செய் த
வழகியதிருச்சிற்றம்பலவன்வாயன்றுவெந்திட்டதென்னுலக ர்
சுழலல்கொண்டறியச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 50

அதனுளங்கொண்டுசெய்தவன்பாவியாமெனமிகுவிசாரத் தி
னிதயனாச்சோர்ந்துமனங்கொளாதிருந்தவன்பன்முன்பலர்களுஞ்சூழ்ந்து
கதமுடையவனுமிரத்தமார்பேதிகண்டதின்மாய்ந்தனனென்று
சுதனையுங்காட்டச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே... 51

அந்தநலீசனும்பலவீனனாயிடினாலையமோச ம்
வந்திடுமென்று வரைந்தநின்சீட்டைவாங்கியேநாவினுக்கரச ர்
சொந்தநற்சிரசிலேற்றிவாசித்துச்சோகமுந்திர்ந்திடப்பின்ன ர்
தொந்தொமென்றொலியுங்காட்டினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 52

நின்றளிகண்டுதரிசனஞ்செய்தநிருபனுக்கமைச்சனாம்பனவன்
பொன்றினரடங்குசமாதியென்றுரைக்கப்பொருசினந்தன்னுளங்கொண்டு
மின்றிகழதனைத்தகர்தனாடென்னவிருப்பொடுவந்தவனய ந்
துன்றிருளடையச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரமசிவமே 53

அரசனாற்றந்தவாக்கினையான்மற்றமைச்சனுமாளினைக்கொண் டு
விரசுமாலையத்தின்கற்கவரினையேவேண்டுகோடரியினாற்பிளக்க ப்
பிரசமேயென்னவிரத்தமும்பெருகிடபீரிடக்கண்டவன்மயங்கி ச்
சுரர்பதியென்னக்காட்டினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 54

சங்கமமடைந்துதிரும்பியபோதுதாங்குமிந்நகரினதெல்லை த்
தங்குறவரசனயனமுந்தெட்டுத்தளர்ந்தனனாடாதனவுங்கே ட்
டிங்குறுந்தளியைப்பெருகிடச்செயவுமென்றுநிவேதனங்செயவு ஞ்
சுங்கமின்மான்யம்பெற்றனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 55

தந்தையைமோக்‌ஷத்தனுப்பிடவந்தனையன்னமனையையாலையநி ன்
றுந்திபினின்முன்னுறுசிவஞானவுத்தமன்றனசெவிப்படந ற்
சிந்தனைப்படியேசெய்தனமென்றுதெரிந்துடனறிகுறியாக த்
துந்துபியொலியுமெழுப்பினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 56

நிணங்கிளர்வேலினயனமாரொருத்திநீடியதீக்‌ஷையையுன்னி க்
கணங்கொளுநினதுசந்நிதிகூடிக்கரையநலவிருத்தையாச்செய் து
குணமலிவெளியில்விடுத்தனையென்றாகூறுவதென்னினியாகு ந்
துணங்கறமதியந்தவழமதிற்றருமைச்சொக்கநாதப்பரசிவமே 57

வயலினிலரியையுரியவரறியாவகையினிற்கரத்தினாலெடுத் தே
யயலிடம்பதுக்கிப்பின்சிரந்தனிற்கொண்டரியதன்மனையினிற்சேர்க்க க்
கயலமர்விழியாள்கைகொடுபிசையக்கருதியேயெடுத்தவணடுங்கி த்
துயர்தரவரவங்காட்டினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 58

தீட்டியதங்கக்கவசமொன்றினையேதிருடினவன்மனந்திகைத்து ப்
பூட்டியகதவந்திறந்திடுவரையும்புகழுநின்னாலையத்தமர்ந் து
காட்டியவுதையங்கண்டெரியாமற்கரையுநினசந்நிதிகொணர்ந் து
சூட்டிநின்றமரச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 59

வாதவூரடிகண்மகிழ்தலைவிரும்பிவையையினீரழைத்ததுபோ ற்
கோதமையாதசச்சிதானந்தாகுலவுகாவிரியினினன் னீ
ராதரவாகவருதலைவேண்டவவ்விதம்வருத்திநற்புகழை ச்
சூதருமுரைக்கநிறுவினைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 60

அரிய மேனியினிற் சாத்திடுந் திருவோற் றாடையை யேந்தி நின்றவன்கண்
பிரியு நீரொற்றி யெடுத்தபி னயனம் பிறங்கிடா திருக்க வுஞ்செய்தாய்
புரியு மன்புடையா ரேத்திடு நின்றன் புகழினுக் கிணையெ வன்புகல்வேன்
சுரிய மர்குழலார் மருவிடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே 61

போற்றபி டேககங் காளங்கள் சுத்தி புரிந்திடா ததனிடைக் கங்கை
யூற்றிய கருவி யோடுதங் கரமு மொன்று பட்டெடுத் திடப்படாம
லாற்றிய வதனாற் கண்டவர் யாருமச் சமிக்கடைந் திடச்செய்தாய்
தூற்றலில் கவிஞர் போற்றிடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே 62

அயலிடம் வைத்த நிவேதனக் கனியை யருந்தியே லந்த வன்வயிறு
புயலென வாக மகோதரங் கொண்ட போததை நோக்கிய பின்னச்
செயலினை நாடி யுலகவ ரறியத் தெரிந்தனை நின்னடி பணியாத்
துயரிலார் பொலியு மாடமார் தருமைச் சொக்க நாதப் பரசிவமே 63

சிங்களத் தரச னனுப்பிப் பினகனி யைச்சீ ரோடு நிவேத னஞ்செய்த
மங்கள முத்துக் குமாரனுக் கிரவி மையமர் காரைக் காலம்மை
யிங்கினத் தோடுந் தந்தா மென்றே யியம்பினை மேனி லைகற்பந்
தொங்கிடு கனியு முதிர்ந்திடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே 64

வஞ்சிமன் னவனு நின்னிடங் கொண்ட மகிழ்வி னாலனுப் பினதான
மஞ்செனு மாரந் தன்னையும் வாங்கி மகிழ்ந்து லக்காட் டியபின்னர்
பஞ்சரக் கிளையோ டுனைத்துதித் தணியப் பகர்நி லம்பொலி முனமேற்ற
துஞ்சொலிக் காட்டி நிறுவினை தருமைச் சொக்க நாதப் பரசிவமே 65

பத்திர னைக்கண் டுபசரித் திட்ட பான்மை யோனின் பணிசெய்த
மித்திர னென்று சொன்னவோர் முநிவர் வியந்திடத் திரும டங்கட்டிப்
பத்திமை கொண்டா னென்று செயளித்துப் பாதுகாத் திடவு நீசெய்தாய்
துத்தனும் பணிந்து வாழ்ந்திடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே 66

இந்துள வனத்திற் கொய்யடி தனக்கு மெழிலுறு மருளை யீந்ததுபோ
லந்திலேழ் நாளுன் சந்நிதி நின்று மகன்றி டாப்போத் தின்நன்மைச்
சிந்தைகொண் ஞான சம்பந்தர் காணச் சீர ருள்செய் தனையென்றுஞ்
சுந்தரன் பணியு முநிவர்சூழ் தருமைச் சொக்க நாதப் பரசிவமே 67

ஆலைநேர் மெழியார் தெரிந்திட வணிமா வாதியா யுள்ள வையனைத்துங்
காலையே வேண்ட மதுரையி லுரைத்த கடவு ணீயென் பதுதெரிய
மாலையில் வாழ்கந் தப்ப தேசிகனு மகிழ்ந்தி டவளர் மகிமாவைச்
சோலையி னடுவிற் சொற்றனை தருமைச் சொக்க நாதப் பரசிவமே 68

வாலியினனைத்தகோட்டையிலொன்றைமறைத்தலிற்கொண்டுபோய்ச்சேர்த்துக்
கூவிநன்மனையையருகினினிறுத்திக்கொட்டுபோத்தனிடையிருந்து
பாவிகண்மனம்போற்கருமணல்விழப்பண்ணினையென்றுசூழபொங்கா
தூவியலன்னந்தங்கிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 69

சந்நிதிநின்றுஞ்சாரங்கிவாங்கித்தன்கரங்கொண்டுவாசிக் கு
முன்னிடமரவம்வந்துநின்றாடமுன்மணிமாசிலாமணி யு
நின்னதின்னருளுமிறதெனக்காணநிறுவினைநல்லருளினை யே
துன்னலாபணியும்புகழ்ப்பெருந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 70

கரந்தனைவீசிமுழுகிடானொருவன்காணுநின்சந்நிதிவாச ல்
வருந்தருணத்திறபடீரொலியோடுவண்புதவடைத்திடப்பட் ட
தரந்தெரித்தனையால்தனையுங்கண்டுசார்ந்திடாவணமுரைத்தன ரே
சுருமபருஞ்சோலைவிரும்பிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 71

உக்கிரகுமரன்கரததில்வேலவலனைசெண்டுற்றிடச்செய்ததுபோல ப்
பக்கலவாழ்சச்சிதானந்தற்கொண்டுடணபமாசாமிநாதப் போ
தக்கவனமகிழமூன்றையுங்கொடுக்கத்தாதுவீற்றிருந்தனைசீட் டு
துக்கிருத்த சொக்கநாதப்பரசிவமே 72

சாத்திடவாரந்தனை யரைத்தவனுத்தாங் கொணாவருத்தமிக்கென் று
கேத்திரமணலைச் சேர்த்தரைத்தளிக்கக் கெழுமியமேனிசாத்திட லு
நேத்திரம்பார்க்குந் தொழிலினை நீக்கி நிறுவினை முதிவரர்கூடி த்
தோத்திரஞ்செய்யும் புகழுடைத்தருமைச் சொக்கநாதப் பரசிவமே. 73

சுந்தரமன்னன்றன் மகற்கரியசுமதியென் மந்திரிதனை யு
கந்தளித்ததுபோன் மாணிக்கவாசகனாலொளிர் சாமிநாதப்பே ர்
தந்திரன்காறுவாறென வழைக்கச் சாற்றினைச் சீட்டை முன்னளித் து
சொந்தந்ன்முன்வருவந்திடுந்தருமைச் சொக்கநாதப் பரசிவமே. 74

கதவரகுணன்றனன்பினாற்சிவ லோகந்தனைக் காட்டியதுபோ ன்
மதிவளர்சாமிநாதமாமுநிவன் மகிழ்தரப்புவியமர்ந்துரைக்கு ம்
விதிசிவஞானதேசிகன்றன்னை விருப்பொடுகாட்டினையதனா ற்
றுதமலியருளை வியந்தனர் தருமைச் சொக்கநாதப் பரசிவமே. 75

ஆவணி மூலநாளிற்சாதனத்தாலாட்டுபோதிடைவிடாதொளி
மாவணியசியார்பலர்களுங்காணமதுரையினடைந்தனமா
தாவணிநரியுன்சந்நிதிநின்றுந்தரிசிக்கச்செய்தனையென்று
தூவணிந*கையார்மேவிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 76

கச்சிவாழபயனுனைத்தரிசித்துச்சடைசெலப்புதவினின்விடை யி
லச்சினைவைத்தபோற்சிவஞானவாரியனாற்பனைசைக் கு
மெச்சிடுசாமிநாதமாமுநிவன்வியந்திடவாறுகட்டியையு ந்
துச்சியென்றளிக்கச்செய்தனைதருமைச்சொக்கநாதப்பரசிவமே 77

நற்றவர்புகழும்பனைசைவாழ்சாமிநாதமாமுநிவரர்பிரான்பா ல்
விற்றவழநாகத்தகட்டினாற்கூரைவேய்ந்திடுபந்தரைநம து
முற்றமேற்செய்யவேண்டுமென்றன்பின்முதியனாச்சென்றெழுகனவி ற்
சொற்றனையவ்வாறியற்றினன்றருமைச்சொக்கநாதப்பரசிவமே 78

நேயமோடுன்னைத்துதித்தான்மறவானிள்பழிதீர்த்தநின்மல னே
யாயநல்வெள்ளையானையின்சாபமகற்றுபுராதனநிலை யே
காயமர்கடம்பவனமுதுநகராக்கண்டிடச்செய்தசிற்பர மே
தோயமார்பண்ணைசூழ்ந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 79

பருங்கயற்கண்ணிதடாதகையாகப்பார்த்தபேரொளியின்சின்மய மே
தருந்திருமணத்தையவ்வயிற்செய்துதழைத்திடுஞானதற்பர மே
யருங்குலவெள்ளியம்பலத்திருக்கூத்தாடிநின்றொளிர்தருபத மே
சுருங்கைநீர்பாயும்வயலுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 80

வழுத்துகுண்டோதரனுக்கனமிட்டவகையினில்வளர்ந்திடுமருந் தே
யழுத்திடுமன்னக்குழியும்வையையுமுனழைத்தருள்செய்தநலமு தே
கழித்தகாஞ்சனமாலைபடிந்திடவேகடலழைத்திட்டசங்கர னே
சுழித்தநீர்ப்பொன்னிக்கரையமர்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 81

ஆன்றநன் மலையத்துவசனை யழைத்து மாடிடச்செய்தகாரண மே
யேன்றவுக்கிரனும்பாண்டியனாவந்திருந்திடச்செய்தபூரண மே
சான்றவணவற்குவேல்வலைசெண்டுதந்துவாழ்ந்தொளிருமாரண மே
தோன்றநல்லறிவுதரும்பெருந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 82

மிடைந்திடுகடலைச்சுவறிடச்செய்யவேலினைவிடச்செய்யும்பொரு ளே
யிடையிலிந்திரன்றன்முடியின்மேல்வளையையெறிந்திடச்செய்பரநிதியே
யடையுநன்மேருவினையுஞ்செண்டாலேயடித்திடச்செய்தநல்வரமே
தொடைமதுவொழுகும்பொங்கர்சூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 83

நிறையரபத்தன்வேண்டவேதத்தினிலைப்பொருளுரைத்தநன்மன மே
கறைதபவொளிருமணியுண்மாணிக்கங்காட்டிவிற்றிட்டநற்றெளி வே
சிறையமர்வருணன்விடுகடல்வற்றச்செய்திடுங்கருணையங்குன் றே
துறையினிலன்னஞ்செறிந்திடுந்தருமைசொக்கநாதப்பரசிவமே 84

கேடமர்வருணன்விடுமழைநடுக்கக்கிளருநாலாகியமாட க்
கூடலாயாக்கியடியவர்மனத்திற்கூடிவாழ்ந்திடுந்னிட்கள மே
தேடிடுமெல்லாம்வலசித்தரென்றுசெப்பிடநின்றுவாழறி வே
தோடலர்கொண்டுசரத்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 85

பொழுதிற்கல்லானைவாயிலிக்கினையும்புகுத்தியுண்ணச்செயுஞ்சித் தே
யிழுதையென்சமணர்விடுத்தயானையினையெய்துநின்றிலகுமாமணி யே
பழுதிலாவிருத்தகுமாரபாலகனாப்பாலிக்கநின்றதற்பத மே
தொழுதினிற்பவரும்வழுத்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 86

உள்ளகைதவனுக்காவிடக்காலையூன்றியம்பலப்பதமெடுத்து ந்
தெள்ளுறவாடுநிபுணமெபழியைச்செட்டியிற்சென்றறியிறை யே
நள்ளுமாதாவைப்புணர்ந்தபாதகத்தைநலிந்திடச்செய்தசிற்குண மே
சுள்ளகம்மில்லார்நள்ளிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 87

ஆசிரியன்றன்மனையையிச்சித்தானங்கம்வெட்டினவருளுரு வே
யேசியசமணர்விடுத்தநாகத்தையெய்துநின்றருளியவழ கே
தேசமர்மாயப்பசுவினையிடபஞ்சென்றுமாய்த்திடச்செயுமரு ளே
சூசனமுடையார்வாசஞ்செய்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 88

திட்டவட்டாலைமண்டபத்தேறிச்சேவகஞ்செய்தொளிர்மெய்க்கா ட்
டிட்டநற்பரமேவறுமையிலுலவரக்கிழியருளியவெழிலித மே
செட்டிவீதிகளினின்றுநல்வளையல்செப்பிளிற்றிடுதரிசன மே
தொட்டநற்கடல்சூழபுவிபுகழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 89

அடிமையின்முதலாம்பெண்கணால்வருக்குமட்டமாசித்திசொலுயி ரே
மிடியிலாச்சோழன்றனைவெளிப்படுத்திவிடையிலச்சினைசெயுங்கர மே
படியில்கைதவனுமகிழ்ந்திடத்தண்ணீர்ப்பந்தரைவைத்த நுண்ணியாலே
துடியிடைமகளிரூசலார்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 90

பூவணத்திரதவாதஞ்செய்தமைத்துப்பொன்னனையாட்கருள்குருவே
மேவலர்சூழச்சோழனைமடுவில்வீட்டியவாதநிற்குண னே
கோவலன்பஞ்சம்விலகிடவுலவாக்கோட்டையைக்கொடுத்தநனிலை யே
சோவணந்தேவருலகமார்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 91

மதுரையம்பதியிற்றனபதியாகிவழக்கினையழித்தருளுரு வே
சித்றுடைப்பழியைநீக்கிக்கைதவற்குச்சிவனகர்காட்டியசீ ரே
வீதியிற்பத்திரனைக்காத்திடவிறகைவீற்றிரவருளியவிகற் பே
சுதியளிநிறையுஞ்சோலைசூழ்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 92

பத்திரன்மகிழச்சேரமான்றனக்குப்பண்பொடுதிருமுகங்கொடுத் த
சித்தமேமழையினனைந்திடாவண்ணஞ்சீரியபலகையையளித் த
முத்தனேயவன்றன்மனைவிபால்வெற்றிமொழிந்திடநின்றவிச்சையனே
சுத்தநற்றவத்தார்துதித்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 93

கிருட்டிடின்குருளைப்பசிதணிந்திடவேகிளர்முலகொடுத்தகற்பக மே
தெருட்டியுமவைகளமைச்சரேயாகச்செய்துநின்றருளியதிற மே
கருக்குரீஇயொடுதாரைக்குபதேசங்கழலடிதந்துவாழொளி யே
துருக்கையும்பரவும்புகழுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 94

மதுரையினெல்லைகாண்பிக்கப்பாம்புவளைந்திடவிட்டகங்கண னே
ததியினிற்சோழன்படைமடிந்திடவேதம்பெயரம்புவிட்டவ னே
பதியினிற்றானும்புலவனாய்ச்சங்கப்பலகைதந்தளித்தபுண்ணிய னே
துதிமலிபுலவர்வணங்கிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 95

கொங்குதேர்வாழ்க்கைப்பாசுரர்தருமிகொண்டிடவெழுதியகர னே
மங்கியகீரன்றனைக்கரையேற்றிவைத்தருளியவிசித்திர மே
நங்கணாரசத்தியன்றனாலிலக்கணந்தெரிந்திடச்செயுமரு வே
சுங்கனும்பணியும்புகழ்மலிதருமைச்சொக்கநாதப்பரசிவமே 96

ஊமனாமுருத்ரசன்மனாற்சங்கமுறுகலகந்தெறுமுற வே
மாமைசேரிடைக்காடன்னோடுஞ்சென்றுவளர்பிணக்கழித்தருட்பே றே
தீமைச்செம்படவரொடும்வலைவீசித்தேவியைக்கொண்டசெம்மலை யே
சோமையுந்தவழும்புகழ்ப்பெருந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 97

வாதவூரகடிகமக்குபதேசமனனிடச்செய்தும்பின்னரியை க்
காதலிற்பரியாயவைகளைநரியாய்க்காட்டியும்வையைநீரடைக்க ப்
பூதலமறியமண்ணெடுத்துழன்றும்பொலிந்திடநின்றமுக்கணனே
சூதமார்பொங்காசூழ்ந்திடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 98

கூனலார்வழுதிசுரத்தொடுதணித்துங்கூடியவமணரைக்கழுவி ல்
வானவரறியவேற்றியுங்கிணறும்வன்னியுமிலிங்கமுமழைத்து த்
தானமர்சாட்சிகாட்டியுநின்றதற்பராபரத்துறுபொரு ளே
சூனமிக்குலவும்பொழிலுடைத்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 99

செப்பிடுகல்வியோடரும்புகழுஞ்செல்வமுமில்லறத்தோ டு
கப்பிடுமனமுமணிந்திடுகலமுங்கண்டவர்களித்திடுசுத னு
மொப்பிடுமனத்தில்வந்திடுதுறவுமொன்றொழியாதுளவாக த்
துப்பினோடனைத்துந்தந்தருடருமைச்சொக்கநாதப்பரசிவமே 100

சொக்கநாதமாலை முற்றுப்பெற்றது.

சாற்றுக்கவிகள்[தொகு]

திருக்கைலாய பரம்பரை தருமபுரவாதீனம் அடியார்
குழாத்துளொருவராகிய ஆறுமுகச் சாமிகள் இயற்றியது.

நளிகொளும்பனைசைமாநகர்ச்சாமிநாதமாமுநிவரன்மகிழ த்
துளிகொளுமேகஞ்சூழ்பொழிற்றருமைச்சொக்கநாதப்பெருமான் சீ
ரளிகொளுமுபயதாமரைத்தாளிலருந்தமிழ்மாலையொன்றணிந்தா ன்
றளிகொளுமயிலைத்தனிநகர்முத்துசாமிநாவலனுளமகிழ்ந் தே

மேற்படி ஆதீனத்து அடியார் குழாத்துளொருவராகிய
சண்முகச்சாமிகள் இயற்றியது

பேசணிசாமிநாதமாமுனிவர்பிரானகமகிழ்ந்துருள்செய்ய த்
தூசகல்புகழ்சேரடியர்சூழ்தருமைச்சொக்கநாதக்கடவுளரி ன்
காசணியுபயசேவடியதனிற்கனிதமிழ்மாலைசெய்தணிந்தா ன்
றாசர்கள்பரவுமயிலைவாழ்முத்துச்சாமிமாலன்புதித்திட வே

திருப்பனந்தாள் காசிமடாதீனம் வித்துவான் சாமி
மலை கனகசபைக்கவிராயரவர்கள் இயற்றியது

நன்மைசேர்பனையைசையம்பதிச்சாமிநாதமாமுநிவரன்மகிழ ச்
சின்மயத்தருமைவாழ்சிவஞானதேசிகமூர்த்திகேட்டுவக்க க்
சொன்மலர்மாலையொன்றுசெய்தணிந்தான்சொக்கநாதப்பெருமான்றா ண்
முன்மிகுதவத்தான்மயிலையில்வாழுமுத்துச்சாமிக்கவிவர னே

திருக்கொள்ளம்பூதூர் உபாத்தி்யாயர் சொக்கலிங்க
தேசிகரவர்கள் இயற்றியது.

ஞானியர்மலியுந்தருமையிற்சொக்கநாதருக்கொருதமிழ்மா லை
தானியமஞ்சேர்மயிலைவாழ்முத்துச்சாமிமான்மகிழ்வினிற்செய் து
நானிலம்பரவும்பனைசையிற்சாமிநாதமாமுநிவரர்பிரானா ர்
தானிருஞ்செவிகட்கேறிடச்செய்துதண்ணருள்பெற்றுவாழ்ந்தன னே

கும்பகோணத்திலிருக்கும் ஓகை. சண்முகம்பிள்ளை
யவர்கள் இயற்றியது

நற்றவர்புகழும்பனைசையிற்சாமிநாதமாமுநிவரர்பிரா னா
ருற்றிடுமவையிற்சொக்கநாதப்பேரோங்கிடுநம்பெருமாற்கு த்
துற்றபல்லணிசேர்ந்திடத்தமிழ்மாலைசொல்லிநற்பொருனினைவிரித் து
முற்றருளவன்கண்பெற்றனன்மயிலைமுத்துச்சாமிக்கவிவல னே

"https://ta.wikisource.org/w/index.php?title=சொக்கநாத_மாலை&oldid=486203" இலிருந்து மீள்விக்கப்பட்டது