பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறப்போர் அண்ணல் 3 முன்பே, காங்கிரஸ் தோன்றுவதற்கு 79 ஆண்டு கட்கு முன்பே, காஜுலு லட்சுமி நரசிம்முலு செட்டி யார் செந்தமிழ் நாட்டின் திருநகராம் சென்னேயில் பெரியமெட்டில் பிறந்தார். செட்டியாரின் தந்தையார், சித்தாலு செட்டியார் சிறந்த வணிகர். செல்வச் சிறப்பும், கல்வியில் காட் டமும் படைத்த தந்தையார்க்குப் பிறந்த காஜ-லு லட்சுமி நரசிம்முலு செட்டியார் சிறந்த முறையில் ஆங்கிலக் கல்வி பயிலுவதற்குப் பெருந்தடையாய் ஏதும் இல்லே. ஆனால், அந்நாளில் ஆர்வமுடைய இளேஞர்களுக்கு அறிவொளி தர-ஆங்கில மொழி கற்பிக்க-புத்துலக அறிவு புகட்ட-பள்ளிக்கூடக் தான் இ ல் லே. பின்னுளில் இந்தியாவில் ஆங் கிலக் கல்வியைச் சிறந்த வகையில் அறிமுகப்படுத் திய பாதிரிமார்கள், பாரதத்தை நோக்கிப் புனித யாத்திரை தொடங்காத காலம் அது. எனவே, சாதாரணப் பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்ந்து கல்வி பயின்ருர் லட்சுமி நரசிம்முலு, பின்னுளில் பச்சை யப்பர் அறங்காவலர் குழு வி ல் உறுப்பினராய் விளங்கி, கல்விக்குப் பெருக்தொண்டாற்றிய அவ ரது ஆரம்பக் கல்விக்கு வழி வகுத்துக் கொடுத்த பெருமை, அந்நாளில் சென்னை மாநகரில் சிறிப்புடன் விளங்கிய கேட்டிஷ் அசோசியேஷன் சொசைட்டி ஸ்கூல்" என்ற சுதேசிப் பள்ளிக்கூடத்தையே சாரும். வணிகத் துறையில் மூழ்கி ஆகூழின் துணையால் அரும்பொருள் திரட்டிய வண்ணம் இருந்த செட்டி யாரின் தந்தையாருக்குத் தம் பிள்ளே கல்வித் துறை யில் அடிப்படையான ஞானம் பெற்றதும், தம் மோடு வாணிபத் துறையில் உழைத்து மேல் நிலை பெறவேண்டும் என்ற ஆர்வமே மிகுதியாய் இருக்