இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
செல்லம் மாள் அழுதாள் - இளஞ்
சிட்டுக் குழந்தைகளும்
மெல்ல அருகில்வந்தே - தந்தை
மேனியைப் பார்த்தழுதார்
மன்னவன் பாரதியும் - மூன்று
மாதம் கழிந்தபின்னர்
பொன்னுடல் தன்னைவிட்டான் - அழியாப்
புகழுடம்பு எய்திவிட்டான்
43