ஐங்தோடு பத்துநாள் ஆன பின்னும் அழகரசன் வரக்காளுேம் ; மாடி அன்னம் சிந்தையினைச் சுடுகின்ற நெருப்புத் துன்பச் சிதையின்மேல் துடிதுடித்தாள் பணம்போச் சென்று தந்தைமகன் இருவருமே புனுகு பூனைத் தவிப்போடு கூடத்தில் திரிந்தார், கண்ணன் இந்தவிதம் செய்வானென் றெண்ண வில்லை' என்றுசொன்னுர் ஊர்மக்கள் இடத்தில் எல்லாம். அரக்காம்பல் திருமேனி நறுநீர் ஆடி ஆடைகட்டும் நேரத்தில், காலின் மீது கரப்பான்வந் தேறுவது போலக் கூசிக் கணநேரம் மெய்சிலிர்த்தாள்; தனது காதற் சறுக்குவிளை யாட்டுக்கு கொந்தாள்; நெஞ்சம் சவப்பெட்டி போலாள்ை: வைரம் கூடத் துருப்பிடிக்கும் என்றெண்ண வில்லை யென்று துங்காமல் துயரப்போர் நடத்த லாளுள் உடம்புக்கால் புழுக்களினைக் கொதிக்கும் வெய்யில் உருண்டபக்கம் சுடுவதைப்போல், கோதை மேனி படும்படுக்கை இடமெல்லாம் கொதிக்கச் சோர்ந்து பதைப்போடு கண்ணயர்ந்தாள் இடையில் தன்னை நடுங்கவைக்கும் கனவுக்குள் ஆழ்ந்தாள் பார்க்கும் கயனவிழிப் போதிரண்டும் உறங்க, முன்னுல் படம்போல விரிகின்ற கனவுக் காட்சி பார்ப்பதற்குப் புதியவிழி ஒன்று பெற்ருள். கண்ணிர்த்தவம் 21