6
செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்
III. ஆராய்ச்சி நூல் நிலையம்
தமிழ் ஆராய்ச்சிக்கென்றே பயன்படும் வகையில் ஓர் ஆராய்ச்சி நூல் நிலையம் சென்னையில் ஏற்பட வேண்டும். அந்நூல் நிலையத்தில் இது வரை தமிழ் சம்பந்தமாக வெளி வந்துள்ள எல்லாச் சுவடிகளும், நூல்களும் இடம்பெற வேண்டும். எந்த நூலும் சுவடியும் நூல் நிலையத்தில் வைத்து ஆராயப்பட வேண்டுமே அன்றி, வெளியில் எடுத்துச் செல்ல எக்காரணத்தாலும் அனுமதித்தல் கூடாது. ஆங்கிலத்தில் 'Reference Library' 6Tன்று வழங்கப்பெறும் (பார்வை ஏடகமாக) நுால் நிலையமாக அது இலங்க வேண்டும்.
IV. பொருட்காட்சி நிலையம்
நூல் நிலையத்தைப் போன்றே 'கலைப் பொருட்காட்சி நிலையம்' ஒன்று நிறுவப்பெற வேண்டும். அதில் தமிழ் நாட்டுச் சிற்பச் செல்வங்களும், ஓவியச் செல்வங்களும், நாணயங்களும், மற்றக் கலைப்பொருள்களும் நேராகவோ படங்கள் வாயிலாகவோ தொகுத்து வைக்கப் பெற வேண்டும்.