இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
19 0 முருகுகந்தரம்
மேகலை:
நீங்கள்ஏதும் குற்றம் செய்யவில்லை! அதுவோர்முன்னெச்சரிக்கை நடவடிக்கை. பெண்கள் விடுதியின் வாயிலை மூடியதால் நீங்கள்இழப்பது என்ன?
(எல்லாரும்மெளனம் தலைகுனிகின்றனர்.
பெண்கள்காலையிலும் மாலையிலும் உங்கள் விடுதிவழியாக நடந்து செல்லும்போது வழியில் நின்று நீங்கள் கேலிபேசி சீட்டியடித்து இனிமேல் மகிழமுடியாது! இது தானே உண்மையான காரணம்? இக்குற்றச்சாட்டை நீங்கள் மறுக்க வேண்டும்.
அலலதுஒத்துக் கொள்ள வேண்டும்.
(மறுபடியும் மாணவர்கள் தலைகுனிகின்றனர். நீங்கள்கேலியும் கிண்டலும் செய்யும் போது அவ்வழியாகச் செல்லும் மாணவிகளை உங்கள் தங்கைகளாகவும் தமக்கைகளாகவும் கற்பனை செய்து பாருங்கள். சரி.