உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

குயிற் பாட்டு

(41 - 45) தராதரம் - உயர்வு தாழ்வு, வாதித்து - வாக்கு வாதம் செய்து, அடியாள் - அடியவளாகிய நான்.

(46 - 50) கூனர் - கூன் விழுந்த கிழவர், மதுர இசை - இனிமையான சங்கீதம்.

(51 - 55) ஒலிடும் - சத்தமிடும் : கத்தும், உண்ணி - இரத்தத்தை உண்ணும் ஒரு வகைப் பூச்சி, மேவாது பற்றாதவாறு, கான் - காடு, கழனி - வயல்.

(56 - 60) தாள் - பாதம், தையல் எனை - பெண்ணாகிய என்னை.

(61 - 65) சாரும் வழி - அடையும் வழி, மேலோர் - பிறப்பு, அறிவு முதலியவற்றால் மேம்பட்டோர்.

(66 - 70) காவலர் - அரசர், ’ஆசை வெட்கம் அறியாது’ என்பது பழமொழி, நேச உரை - அன்பு வார்த்தை, நெடிது உயிர்த்து-பெருமூச்சு விட்டு. பாழ் அடைந்த - பாழாய்ப்போன கேட்டுக்குக் காரணமான, இன்பக்களி - காம மயக்கம்.

(71) - 75) பார் - உலகம், கோட்டுப் பெருமரம் - கொம்புகளையுடைய பெரிய மரம், கா - சோலை, நான்முகன் - பிரமன்.

(76 - 80) காணரிய - அளவு காண முடியாத: காண + அரிய=காணரிய - தொகுத்தல் விகாரம்.

(81 - 85) உருளை - உருண்டை, அண்டம் - உலகம்.

(86 - 90) ஞாலம் - உலகம், அனந்தம் - அளவில்லாதன, சமைத்துவிட்டாய் - படைத்தாய்.

(91 - 95) தாலம் - உலகம், கானாமுதம் - கான + அமுதம் இசையமுது தீர்க்கசந்தி.

(96 - 100) பூதங்கள் - நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பெரும்பூதங்கள், கயம் - இனிமை.

(101 - 105) செத்தை - துன்பம், மீட்டும் - திரும்பவும், வன்னக்குயில் - அழகிய குயிற் பறவை.

(106-110) கானக்குயில் - கானம் + குயில்-காட்டுக் குயில், இசை பாடும் குயில்.