உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிப்புரை

45

(21-25) மண்டு துயர் - மிக்க கவலை - வினைத்தொகை, உடைவன - தடுமாறுகின்றன.

(26-30) விற்பனர் - அறிவுடையோர், வெள்கி - வெட்கப்பட்டு, காலைக் கதிர் - உதய சூரியன்.

(31 . 35) தழல் - நெருப்பு, இங்கிதம் - இன்பம்.

(86 - 40) விண் - ஆகாயம், மூலத்தனிப் பொருள் - இறைவன், மேலவர் - பெரியோர், விரியும் ஒளி - எங்கும் நிறைந்த பேரொளி, குாலம் - உலகம்.

(41 - 47) நகையுறுத்தி - அழகுபடுத்தி, மலர்ச்சி - புதிய அழகு, புவி - உலகம்.

7. குயிலும் மாடும்

(1 - 5 ) துயில் - உறக்கம், கோலம் - அழகு. மோட்டுக்கிளை - உச்சிக் கொப்பு.

(6 - 10) கிழக்காளை - வயது முதிர்ந்த காளை மாடு, ஆழமதி - மிக்க கவனம், வெகுண்டேன் - கோபம் கொண்டேன், குமைந்தேன் - சீறினேன்.

(11 - 15) சூழ்ச்சி - தக்க உபாயம், மோகப் பழங்கதை - காதல் கதை, நந்தி - காளை.

(16 - 20) காமன் - மன்மதன், மூர்த்தி - தெய்வ வடிவுடையான், பொற்பு - அழகு, மேனியுறும் காளை - உடல் கட்டுடைய காளை.

(21 - 25) கனம் மிகுந்திர் - பெருமை மிகவும் உடையீர், பொதி - மூடை, வானத்து இடி - மேகத்தில் தோன்றும் இடி முழக்கம்.

(26 - 80; கடுமோகம் - மிக்க காதல், பார வடிவு - பெரிய தோற்றம், தீர நடை - கம்பீரமான நடை

(31 - 35) சல்லித்துளிப் பறவை - மிகவும் இழிந்த பறவை, அல் - இரவு, எற்றுண்டு - தாக்கப்பெற்று, முடைவயிறு - நாற்றம் பிடித்த வயிறு.

(36 - 40) சீழ் - துர்நாற்றமுடைய இரத்தம், நீசப்பிறப்பு - இழிக்க பிறவி.