உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

குயிற் பாட்டு

(31 - 35) பட்டு மயிர்-பட்டுப்போன்ற மெல்லிய உரோமம்; உவமைத் தொகை; எட்டு உடை - எட்டு வகையான ஆடைகள்.

(86 - 40) நேர்வதற்கு - ஒப்பாவதற்கு எத்தை - எதனை.

(41 - 45) ஈனம் - இழிவு - குற்றம், கச்சை - அரைக்கச்சை: ஆடவர் இடையில் கட்டுவது (Beit), பாகை - தலைப்பாகை, திருவால் - அழகிய வால்.

(46 - 50) போசனம் - உணவு, சாதுரியம் - திறமை, நேமத் தவம் - முறையாகச் செய்த தவம், நியமம - நேமம் என்று ஆயிற்று.

(51 - 55) கீர்த்தி - சிறப்பு, ஆரியர் - சிறந்தவர் மைக்குயிலி - கருநிறக் குயில், நீசக்குயில் - இழிந்த குணமுடைய குயில்.

(56 - 60) இசை இன்பம் இத்தகையதென விளக்கும் பகுதி. வற்றல் குரங்கு - உடல் மெலிந்த குரங்கு, வெறி - மயக்கம்.

(66) - 65) பிறாண்டி - காலாலும் கையாலும் தோண்டி வாரி இறைத்தல் - அள்ளி வீசுதல்.

(66 - 70) கதி -நிலை, ஆற்றுகிலேன் - பொறுக்கமாட்டேன், களியுறுவேன் - இன்பம் அடைவேன்.

(71 - 75) புண் செய - வருத்த.

(76 - 80) மாயம் - வஞ்சகம், தொகை தொகையா - கூட்டம் கூட்டமாக, வெள்ளறிவு - அறியாமை.

6. இருளும் ஒளியும்

(1 - 5) ஞாயிறு - சூரியன், மோனம் - மௌனம் - அமைதி, மொய்ம்பு - வலி, உய்யும் வழி - தப்பும் வகை.

(6-10) பீரக்கினை உணர்ச்சி, மூர்ச்சை சிலை - மயக்கம், வெளிறும் முன் - வெளுக்கும் முன்னால், பொழுது விடியும் முன்பு, வைகறை; இரவின் கடைசிப் பகுதி - கடைச் சாமம்

(11-15) நெரித்து விட்டார் - அடுக்கடுக்காகப் பல கேள்விகளைத் தொடர்ந்து கேட்டார்.

(16 - 20) அகல்வீர் - நீங்குவீர், நைந்து - மனம் வருந்தி

விடாய் - களைப்பு, முழுத்துயில் ஆழ்ந்த உறக்கம்.