கணவனர் விரதம் காத்த காரிகை 57 பைரவர் பரஞ்சோதியாரது பணிமொழி கேட்டு, ' ஐய, நீர் கூறுவது சரியே. யாம் உத்தராபதியோம். எம் உணவும் ஒழுக்கமும் வேறு. ஆதலின், எம்மை உண்பிக்க உம்மால் இயலாது. என்றனர். பரஞ் சோதியார் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமற் போவது போல் வந்த அடியரும் நழுவிப் போகின்ற னரே என்று வாட்டமுற்றவராய், பெரியீர் !. நீர் உம் கருத்தை அறிவிப்பின் அவ்வாறே செய்ய முயல் கின்றேன்.” என்ரும். பைரவர் பரஞ்சோதியாரை நோக்கி, ' உம்மால் செய்ய இயலுமா ? யாம் ஆறு திங்கட்கொரு முறை பசுவை உண்பது பழககமாகும. அவவாறு உண ஆணும் நாளும் இன்றே அமைந்தது. இது செய்ய உம்மால் இயலுமோ ? இயம்புவீர்” என்ருர். இவ்வாறு பைரவர் சொல்லக்கேட்ட பரஞ் சோதியார் எல்லேயில்லாக் களிப்பெய்தினர். ' உய்க் தேன், உய்ந்தேன் : அடியனேன் உய்ந்தேன் இஃது எனக்கு முன்புளதே. யான் முக்கிரையும் உடையேன். இதை முன்பே கூறியிருப்பின் முன்பே முடித்திருப் பேன். ஈண்டே சிறிது ஆற்றியிரும். இல்லம் சென்று நீர் வேட்டவாறே அட்டதன் பின் அழ்ைத்துச் சென்று அமுதுண்பிப்பேன்.' என்று பரவசமாய்ப் பகர்வாரானர். பைரவர் பரஞ்சோதியாரது பரிவு கண்டு. " நண்பரே நீர் சிறிதும் சிந்தித்திலிர். யாம் உண்பது பகவெனில், நீர் நாற்கால் பசுவென்று கம்பிவிட்டீர் போலும் ! நாற்காற் பசுவன்று கரப் பசுவே காம் உண்பது. அப்பசு ஐயாட்டைப் பருவத்ததாய் அமை தல் வேண்டும். உறுப்பில் மறுவில்லாதாய் வயங்க'