இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
5. நல்ல பாடம் !
பள்ளிக்கூடத்துக்கு நேரமாகிவிட்டதே! நேரம் கழித்துப் போல்ை, ஆசிரியர் கோபித்துக்
கொள்வாரே என்று அவசர அவசரமாகப் புறப் பட்டான் அன்பழகன்.
எப்பொழுதும் மணிஅடிப்பதற்கு முன்பாகவே வகுப்பிற்கு வந்து விடுவான். இன்று அவன் வழக்கம்போல் புறப்படாமல், விளையாடிக் கொண்டு இருந்துவிட்டான்.
அவன் அதிக ஆசையோடும் அன்போடும் விளையாடுவது அவனுடைய செல்ல நாய்க்குட்டி யோடுதான். அதன் பெயர் டாட்டா. அவன்தான் அதற்கு அப்படிப் பெயர் வைத்தான். ஏனென்ருல், அவன் வீட்டைவிட்டு வெளியே போகும்போது முன் காலைத் துரக்கிக் கொண்டு, இரண்டு கால்களால் வணக்கம் சொல்வது போல் நிற்கும். அதல்ை, அதனை டாட்டா என்று கூப்பிடுவான்.
அவன் வீட்டில் அனைவரும் அப்படியே நாய்க் குட் டியை அழைப்பார்கள். அந்த டாட்டாவுக்கும்