பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(126 காமா: (அதிர்ச்சியுடன்) நீ என்ன சொல்றே? சிங்காரம் பெரியசாமியைவிட மோசம்னு சொல்றியா? கொஞ்சம் விவரமா சொல்லும்மா... நான் மோசம் போயிடுவேன் போலிருக்கே! பொன்: இந்த டானிக் விலை 10 ரூபாதான். ஆன உன் பையன் 15 ரூபான்னு சொன்னனே, ஏன்? காமா: (படபடப்புடன்) இத்தா பில் இருக்குதே... எப்படி என்னை ஏ-மாத்த முடியும்? ஒவ்வொரு தடவையும் பில் கொண்டு வந்து தர்ரானே! (பில்லை எடுத்து பொன்னம்மாவிடம் தருகிருள்). பொன்: (வாங்கிப் பார்த்துவிட்டு) இது மூணு மாசத்துக்கு முன்னே வாங்கின ஒரு மருந்தோட பில், அதைக்காட்டி உன்கிட்ட பொய்சொல்லி ஏமாத்தியிருக்கான். ஆமா... புது பில் இப்படியா கசங்கியிருக்கும். ஒவ்வொரு தடவையும் இந்த பில்லைக் கொடுத்து ஏமாத்துவானே என்னமோ? காமா: (ஏதோ யோசித்தவாறு, ஒரு முடிவுக்கு வந்து) ஆமா! நான் மாடத்துல வைக்குற பில்லு காணுமே போயிடும், அது ஒரு வேளை காத்துல போயிருக்கும், கை மறதியாக எங்கேயாவது வச்சிருப்பேன்னு நினைச்சுக்குவேன். இப்பதாம்மா புரியுது. சிங்காரம் பண்ணியிருக்கிற சில்மிஷம்...ம் நான் இதுக்கு மேல என்ன செய்ய முடியும்... பொன்: காமு, நீ படிக்காம இருக்கறதால உன்னை ஏமாத்த அவங்களுக்கு எவ்வளவு சுலபமா இருக்குது பார்த்தியா; ரொம்ப நாளா நீயும் ஏமாந்திருக்கே...ம் (முகர்ந்தபடி) னே மர்திரி