இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
70
டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா
சில சமயங்களில், காதுக்குள் அழுக்குகள் சேர்ந்து குறும்பியாகி (Wax) அடைத்துக் கொள்வதுண்டு. அதனை எடுக்கிறோம் என்று முயற்சித்து, கூரான குச்சிகளையோ, ஊக்கையோ மற்றும் கையில் அப்பொழுது கிடைக்கின்ற சாதனங்களை வைத்துக் கொண்டு குடைந்தெடுப்பவர்கள் உண்டு.
அப்பொழுது செவிப்பறை கிழிந்து போகநேரிடும். அதனால் காது செவிடாகிப் போவதும் உண்டு.
காது கேட்காமல் போவது வயதானதால் தான் என்று நம்பிக்கொண்டு, வைத்தியர்களை அணுகாமல் அவதிப்படுவோர் பலர். நிலைமையை ஏற்று அறிவோடு நடந்து கொள்பவர்களே முதுமையை வென்று இளமையாக வாழ்கிறார்கள்.