உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துணிந்தவன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*2 துணிந்தவன் 'கூடாது கூடாது.... நான் போகிறேன்' என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான் அவன். அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. காந்திமதிக்கு அழுகை பொங்கியது. நெஞ்சம் துயரத்தால் கனக்க, தொண்டையில் சோகம் அடைக்க, கண்கள் நீரைக் கொட்ட அவள் ஏக்கத்தோடும் ஏமாற்றத் தோடும் வீட்டுக்குள் இருளில் கலந்து விட்டாள். நிலவொளியில் குளித்தபடி நடந்த மாதவன் மனதில் ஒர் திருப்தி நிறைந்து நின்றது. இன்று அவளுக்கு ஏமாற்றமும் வேதனையுமாகத்தான் இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் அவளே இந்தச் சந்தர்ப்பத்தை எண்ணி மகிழ்ச்சி அடைவாள் என்பது திண்ணம். குடும்பப் பெண் கவில் அநேகருக்குக் கன்னிப் பருவக் காதல் தோல்வியாக முடிந்தபோதிலும், சம்பிரதாய ரீதியில் நடைபெறும் கல்யாணம் வாழ்வில் உறுதியும் நிச்சயமான ஒரு ஸ்தானமும் தகுதியும் பெற்றுத்தரும் நல்வாய்ப்பாகவே அமைகிறது" என்று நினைத்தான். - 'இதுதான் நான் செயயும் கடைசி நல்ல காரியம்' என்ற எண்ணம் அவன் மனப்பரப்பிலே மின்வெட்டியது. 'நான் செய்ய ஆசைப்பட்ட நல்ல காரியம்கூட இன்னொரு ஆத்மாவுக்கு வேதனையும் அழுகையுமல்லவா தந்து விட்டது!’ என்றும் எண்ணாதிருக்க முடியவில்லை அவனால், 3 நல்லவனாக வாழ்வதனால் லாபம் இல்லை என்று உணர்ந்த மாதவனின் முன்னோர்களில் எவரும் பூரண அயோக்கியர்களாக விளங்கியவர்கள் அல்லர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/24&oldid=923495" இலிருந்து மீள்விக்கப்பட்டது