பத்தர்
பதி புண்ணியம்
றியவை. ஆகமப் பிரிவு. சிவஞானபோதத்தைக் கேட்பதற்கு முன் இந்நூல்களை மாணவர் கற்பது நல்லது. வேறுபெயர் யாப்பு. காலம் 13-15 ஆம் நூற்றாண்டு பா. பாடியம்.
பத்தர் - சிவ பத்தர்.
பதாத்துவா - பதங்கள். அத்துவா 6 இல் ஒன்று.
பதார்த்தம் - பருப்பொருள். 1) பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் 2) சித்து, அசித்து, ஈசுவன் என்னும் மூவகை மூலப் பொருள்கள்.
பதி - இறைவனாகிய சிவனைக் குறிக்கும் சைவ சித்தாந்தச் சொல். முப்பொருள்களில் முதல்பொருள். பதி உண்டு என்பதைக் கருதல் அளவை மூலம் சிவஞான போதம் காட்டுகிறது.இதனை வழிநூலாகிய சித்தியார் சுபக்கமும் சார்பு நூலாகிய சிவப்பிரகாசமும் விரிவாக விளக்குகின்றன. மற்றும் ஊர் இடம் என்றும் பொருள்படும்.
இரு வழக்குரைகள்.
1)உலகியல் வழக்குரை: உலகத்தை ஒரு காரியமாகக் கொண்டு,அதனை உண்டாக்கிய காரணன் ஒருவன் உண்டு எனக் கொள்ளுதல்.
2)அறவியல் வழக்குரை: உயிர்கள் செய்யும் இருவினைகளின் பயன்களைத் தக்கவாறு அவ்வுயிர்களுக்கு ஊட்டி,அவற்றை உய்யச் செய்யும் அறங்காவலனாக இறைவன் இருக்கிறான்.
விளக்கம்
உலகமானது அவன், அவள், அது என்னும் முப்பகுதிகளைக் கொண்டு தோன்றியும் நிலைத்தும் மறைந்தும் வருவது. ஆதலால் அது காரியமாகும். அதனை உண்டாக்கியவன் ஒருவன் இருக்க வேண்டும். உலகு எதில் மறைந்ததோ அதிலிருந்துதான் மீண்டும் உருவாக வேண்டும். தன்னுள் உலகத்தை ஒடுக்கிய ஒருவனே அதனை மீண்டும் உருவாக்குவான்.மீண்டும் இறைவன் அதனைப் படைப்பது உயிர்களைப் பற்றியுள்ள மலம் நீங்குவதற்காக ஆகும். ஆகவே, உயிர்கள் செய்யும் இருவினை காரணமாக நிகழும் போக்குவரவைத் (இறப்பு, பிறப்பு) தன்னில் பிரியாது நிற்கும் தன் ஆற்றலைக் கொண்டு இறைவன் நெறிப்படுத்தி நிகழுமாறு செய்கிறான்.
பதி இருவினை ஒப்பு - பதித் தீவினை விரும்பப்படாத ஒன்று. அதுபோல், பதி நல்வினையும் பசுபோதங் கெடாத சாலோ காதி பதங்கருதி விரும்பப்படாது நீங்கல்.
பதிகம்- பாயிரம், 10 செய்யுட்களைக் கொண்டது. தெய்வத்தைப் பற்றிப் பாடப்படுவது.
பதிஞானம் - இறையறிவு.
பதிஞான வாழ்வு - பரம்பொருளோடு இரண்டறக் கலக்கும் நுகர்வு.
பதிதன் - சண்டாளன்.
பதிபாசம் - ஆணவமலம்.
பதிபாசத் தொடர்பு - அத்துவிதத் தொடர்பாகும். கலப்பினால் ஒன்றாயும் பொருள் தன்மையால் வேறாயும் உயிருக்கு உயிராம் தன்மையால் உடனாயும் இறைவன் இருக்கும் தொடர்பு.
- சிவனுக்குச் செய்யும் திருப்பணி
180