சாத்தியர்
சார்ந்ததன் வண்ணம்
வைதிகம் : 1) இலெளகிகம், ஆயுள் வேதம், தண்ட நீதி 2) மீமாஞ்சை (சைமினி),நியாயம் (அக்கபாதர்), வைசேடிகம் (கணாதமுனிவர்) 3அத்தியான் மிகம்-சாங்கியம், பாதஞ்சலம் (பதஞ்சலி), வேதாந்தம4) அதி மார்க்கம் (கபிலமுனி) பாசு பதம், காபாலிகம், மாவிரதம் 5) மாந்திரம் - சிவன் அருளிய சித்தாந்தம.
சுருங்கக்கூறின், மீமாஞ்சை,வைசேடிகம் நியாயம், சாங்கியம்,பாதஞ்சலம், வேதாந்தம் ஆகிய ஆறுமாகும். இவற்றில் வேதாந் தம் ஒன்றுமட்டுமே அத்து விதம் - ஏனைய ஐந்தும் பேத நூல்கள். அவைதிகம் : உலகாயதம், பெளதிகம், ஆருகதம்.
சாத்தியர் -தேவருள் ஒரு சாரர்.
சாத்துக்கூறை-விக்கிரகங்களுக்கு அணியும் ஆடை
சாத்துப்படி-கோயில் விக்கிரகங்களுக்குச் செய்யும் அழகு.
சாதாக்கியம் - சதாசிவ தத்துவம் ஞானமும் கிரியையும் சமமாக இருத்தல்.
சாதாகா சாரியார் - நன்மைசெய்பவர்.
சாதாரண இலக்கணம் - பா.இலக்கணம்
சாதாரம்-ஆதாரத்தோடுகூடியது.
சாதார தீக்கை - படர்க்கையில் சுத்தானம், சைதன்யத்தில் ஆவேசித்து உணர்த்தும் தீக்கை
சாதி- ஒரு கூட்டத்துக்குப் பொதுவாக உள்ள தன்மை, குலம்.
சாதி ஞானம் - ஒரு சொல் ஒருமை ஈறு தோன்றியாவது தோன்றாமலாவது நின்று பன் மைப் பொருளை உணர்த்துவது.
சாதித்தல்-சாதனத்தால் நிறுவுதல்
சாதிநெறி-சாதி கோட்பாடு
சாந்தம் - அமைதி சுவை 9 இல் ஒன்று.
சாந்த ரூபம் - பொறுமையாய் இருக்கும் தன்மை,
சாந்தி அதீதை - கலை 5 இல் ஒன்று.
சாமரம் - விசிறி கொண்டு விசுறுதல் வழிபாட்டு முறைகளில் ஒன்று
சாமீபம், சாமீப்பியம் - இறை நிலை 4 இல் ஒன்று. கடவுள் அருகில் இருத்தல். பா. சன்மார்க்க முத்தி,
சாம்பொழுது-அறிவு ஒடுங்கும் பொழுது
சாம வேதம் - வேதம் 4 இல் ஒன்று.
சாமுசித்தராவார் - சிவபாவனை பண்ணும் சீலர்,
சாயாக்கோள் - இராகு, கேது.
சாயுச்சியம் - இறைநிலை 4இல் ஒன்று. ஆன்மா கடவுளுடண் ஒன்றும் நிலை.
சாயை காட்டுதல் - கண்ணாடி காட்டுதல் வழிபாட்டு முறைகளில் ஒன்று.
சாரணர் - சமணரிலும் புத்தரிலும் சித்தி பெற்றவர்.
சாரவம், சார்வம் - சட்டி
சார்தல் - அடைதல்.
சார்ந்ததன் வண்ணம் - தற்றரும தருமி என்பது வடமொழி வழக்கு படிகம் தான் சார்ந்த பொருளின் வண்ணமாதல் போல், சத்து, அசத்து என்பவற்றுள் எதனோடு சார்கின்றதோ அதன் தன்மைத்தாய் நிற்பது ஆன்மா. இதுவே