பக்கம்:நல்ல மனைவியை அடைவது எப்படி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


இது போன்ற உயரிய முறை அனுஷ்டானத்திற்கு வர, சமுதாய மக்களின் மனப் பண்பும், அறிவு அபிவிருத்தியும் உயர வேண்டும்.

இன்றைய நிலையிலே, மணம்புரிந்து கொள்ள விரும்புகிற ஒவ்வொரு ஆணும் பெரியோர்கள் தேர்ந்தெடுக்கிற பெண்ணைப்பற்றிய விவரங்களை ஆராய்ந்து அறிந்தும், பெண்ணை ஒன்றிரு முறைகள் நேரில் பார்த்தும், திருப்தியுற்ற பிறகே தன் சம்மதத்தை அறிவிக்க வேண்டும். தனக்கு நிச்சயிக்கப்படும் கணவனின் பண்புகள், குணம் முதலியவை பற்றியும் உறவினர் மூலமாக மேலும், நம்பிக்கைக்குரிய யார் மூலமாகவாவது அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். மகளுக்கோ மகனுக்கோ இஷ்டமில்லாத கல்யாணத்தை எப்படியும் நிறைவேற்றத் துடிக்கக் கூடாது பெரியோர்கள்.

இலக்கிய ரசிகனை ஒருவன் கல்வி வாசனையற்ற முண்டத்தை விரும்பமுடியாது. கலையின்செல்வியான பெண்பணத்தில் மட்டுமே குறியான மண்டூகத்தை தேசிக்கமுடியாது. எழிற்சிலை போன்றவன் குந்தானி உருவினளை ரசிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதும், பூங்கொடி ஒருத்தி பொத்த பூஷணிக் காய் மாப்பிள்ளைக்கு சரியான ஜோடியாவாள் என நம்புவதும் பேதமை. குட்டையனுக்கு நெட்டச்சியையும், நெட்டையனுக்கு குள்ளவாத்தையும் 'முடிந்துவிட்டு' அவர்கள் வாழ்வு சீர்கெட்டபின் விதிமேல் பழியைப்போடுவதும் மதியினம். இந்த ரகமான தாறுமாறன ஜோடிகள் சேர்க்கப்படும் மணமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது கல்யாணம் செய்துகொள்கிற யுவ யுவதிகளின் கடமையாகும்.