24 சிவ ஞா ன ம்
தங்களுக்கு நியாயமோ ? அவன் பந்தயம் வைத் துப் பணம் பெறுவதற்கு நாங்கள்தாமா அகப்பட் டோம் ? அவன் வெற்றி பெறுதற்கு அவனன்ருே ஓடுதல் வேண்டும்? அது வல்லவோ அவனுக்கு அழகு ? - மதியின் மிக்க மானுடர்கட்கு இது தெரியவில்லையா?-ஆ அநியாயம்-அநியாயம்! அம்மா, பின்னர் என்ன நிகழ்ந்தது ? அதைச் சொ ல்லுங்கள். குதிரை கண்மணி, நீ கண்ணிர் விட்டுக் கலங்கி நிற்க வேண்டாம் திக்கற்றவர்க் குத் தெய்வம்துணை செய் யும். என் அன்பே, அருமைச் செல்வமே, அது குறித்து நீ வருந்துதல் வேண்டாம். இறைவன் அருளால் அக்காயம் எனக்கு எளிதில் ஆறி விட்டது. அவனுக்கோ நல்ல புத்தி புகட்டினர். அவன் அன்று முதல் காலுடைந்த நொண்டி யாயினு ன். அவன் பந்தயமும் பாழாய்ப் போயிற்று. என் ஓட்டமும் நடையும் அன்ருேடு ஒழிந்துபோயின. அதல்ை அவன் என்னை முற்றி லும் வெறுக்கலாயின்ை. முடிவில் நான் ஒரு செல்வருக்கு விற்கப்பட்டேன். =
அருமைக் குழந்தாய், என் புதிய எசமானர் மிகவும் நல் லவர். அவர் என்ன என்றும் துன்புறுத்திய தில்லை. அங்கே எனக்கு இருந்த வேலையும் மிகவும் சொற்பமே. அவர் என்பொருட்டு ஒருசிறு வண்டி செய்தார். அவ்வண்டியை டாக் கார்ட் (Dog Cart) என்று அழைக்கிருர்கள். அதில் அவர் புதல்வர்களை ஏற்றிக் கொண்டு நான் பாட சாலைக்குச் செல்வேன் ; பின்னர் அவர்களை