பக்கம்:புலவராற்றுப்படை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவனையாற்றுப்படுத்துக் கூறுமாற்ருனே புலவராற்றுப் படையென வாயிற்றென்ருலோவெனின் - புறப்பொருள் வெண்பாமாலைப் பாடாண் படலத்து 'பாடாண்பாட்டே' என் னுஞ் சூத்திரத்தில் 'அமரர்கண் முடியு மறுவகை யாகிய, கொடி நிலை கந்தழி வள்ளி குணஞ்சால், புலவரை யவர்.வயிற் புகழ்ந் தாற்றுப் படுத்தல், புகழ்ந்தனர் பரவல் பழிச்சினர் பணித, னிகழ்ந்த காமப் பகுதியுட் டோன்றிய, கைக்கிளை வகையும்' என்புழிப் புலவரையவர் வயிற்புகழ்ந்தாற்றுப்படுத்தல் என்பதற்கு அருங்களவானத் தமரர்வயிற் பெரும்புலவனை யாற்றுப்படுத் தன்று' என்பதாற், கந்தழிவேண்டினைெரு புலவனே அமர ரிடத்து ஆற்றுப்படுத்தலே புலவராற்றுப்படையாமாகலின், அது பொருந்தாதென்க. அல்லது உம் அது 'அமரர்கண் முடியு மறு வகை யானும் என்னுந் தொல்காப்பியப் புறத்தி ணையியற்குத்தி ரத்துப் போந்த பாடாண்டிணைக்கட் டெய்வப்பகுதியுளடங்கியது. இது 'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியு, மாற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெரு.அர்க் கறிவுறி இச், சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்' என்னும் மக்கட் பகுதியுளடங்கிய செந்துறைப் பாடாண்பாட்டெனக் கொள்க.

பரிதி வெயில் எறிக்கும் விரிவு உறு வெளி கீழ் விள கனி நின்று ஆங்கு நின்று - ஞாயிறு தன்வெயிலை யெறிக்கின்ற விரிந்த ஆகாயத்தின் கண் விளம்பழமொன்று நின்ருற்போல நின்று,

இக்காட்சி பகற்காலத்துக் காண்டலென்பது போதர வெயி லெறிக்கும் வெளியென்ரும் . கீழ்-ஏழாவது. நிழற்கீழ்' என் முர் பிறரும். இவ்வாதாரமருவாயும், ஆதேயமுருவாயு நின் றன; 'ஆகாயத்திற் பருந்து' என்பதுபோல. நின்ருலென்னும் வினையெச்சம் நின்றென நின்றது. மேல் வருவனவுமன்ன.

துளங்கிய - விளங்கின,

மணி என மருள் நீர் உருள் நீர் உம்பர் - நீலமணியென்று மருளுநீர்மையினையுடைய உருண்ட நீரின்மேலே,

உருணிர் - கடல். நீரினியற்கைவடிவம் உருட்சியாகலின், உருணிரென்ரும். அது படைப்புக்காலத்து ஆகாயத்தின் கண் ணுருண்டு நின்றதாகலின்.

மணல் அடர்ந்து ஆடைஇல் படர்ந்தன்று - மணல்கணெருங் கிப் பாலாடையொப்பப் படர்ந்தது இப்பூமி,

17

17