கதைகளைப் பற்றி...
ேெழ்க்கையும் மனித இயல்புகளும் தினசரி எவ்வளவோ உண்மைகளை கற்றுத் தருகின்றன.
வாழ்க்கை மிகப் பரந்தது. ஆழமானது. விதம் விதமான அம்சங்களைக் கொண்டது. புதிரானது. சிக்கல்கள் மிகுந்தது. துன்பங்களும் சந்தோஷங்களும் நிறைந்தது. மனிதர்களை பலப்பல விதங்களில் பாதிப்பது கொடுமையானது. இதம் தருவது. வேடிக்கையானது. முரண்கள் மிக்கது. ஆகவே சுவாரசியமானது.
வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிற மனிதர்களும் சுவாரசியமானவர்கள் விதம் விதமான இயல்புகளும் போக்குகளும் உடையவர்கள். உணர்ச்சிகளால் இயங்குகிறவர்கள் - இயக்குவிக்கப்படுகிறவர்கள்.
உணர்ச்சிகள் பலப்பல. ஒவ்வொரு உணர்ச்சியும் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரித்தான் பாதிக்க வேண்டும் என்பதில்லை. ஒரே உணர்வு ஒரு மனிதனை எல்லா நேர்ங்களிலும் ஒரே ரீதியில் தான் பாதிக்கும் என்பதும் இல்லை.
அதே போல வாழ்க்கையின் நிகழ்வுகளும் மனிதரை பல விதங்களில் பாதிக்கின்றன. ஒரே மாதிரியான நிகழ்வுகள்