117
தலைப்பில் வெளிவரும் வார்த்தைச் சேர்க்கையில் வசன் மும் அல்ல, கவிதையும் அல்ல’ என்றும் கூறி இருக்கிருச். புதுக் கவிதையையும் வசன கவிதையையும் அவர் பிரித்துப் பேசி இருப்பது தெரிகிறது. யாப்புக்கும் கவிதை நடைக்கும் உள்ள உறவு பற்றி கூறுகையில், - 'யாப்பு முறையானது பேச்சு அமைதியின் வேகத் திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு ரூபமேயொழிய பேச்சு முறைக்குப் புறம்பான ஒரு தன்மையைப் பின்பற்றி வார்த் தைகளைச் சேர்ப்பதல்ல." -
என்று குறிப்பிட்டிருக்கிருர். மேல்நாட்டு புதுக்கவிதை
முயற்சிகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களில் ஒன்று, பேச்சு வழக்கில் உள்ள இசைவான வார்த்தைகளையும் வார்த்தைத் தொடர்களையும் கவிதையில் நிறையப் புகுத்து வது. பேச்சு அமைதியையும் புதுக் கவிதைகளில் காண முடியும். எனவே புதுக்கவிதைகள் அமைவதற்கு உதவு பவைக்ளில் சொற்களின் முக்யத்வம் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. கவிதைக்கு ஒலிநயம் போலவே சொல் அமைவும் எவ்வளவு இன்றியமையாதவை என்பதை காட்டும் பின்வரும் கு ப.ரா.வின் கவிதை வரிகள்.
கவிகள் களேப்பின்றி காவியமியற்ற
நின் கண்கள் என்ன நிலைக்காக் கவர்ச்சியில்
கருமை தட்டியவை?
யுகம் யுகமாக மனிதனே
மாயை போல மயக்க
உன் கருவளேயும் கையும்
என்ன சொற்சுவையில்
கருதி சேர்ந்தவை?
மானிடன் மார்பில்
ஒவ்வொரு அடியிலும் எதிரொலிக்க
உன் கால் மெட்டி
என்ன வெள்ளி இசையில்
இன்பம் கட்டியது?
இந்தச் செய்யுளுடன் பாரதியின் காட்சிகளில் உள்ள
வரிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் புதுக் கவிதைக்கும் வசன்