88
இன்ப வாழ்வு
என்று தன் சுற்றுப் பயணத்தையும், குறி சொல்லித் தான் பெற்ற வெற்றி விருதுகளையும் வெளிப்படுத்தினாள்.
சுற்றுப் பயணத்தால் அறிவு வளர்ச்சியும் ஆற்றலும் உண்டாகும் என்பதற்கு இக்குறப்பெண் சான்று என்பதை எவரும் மறந்துவிட முடியாது. பல ஊர்த் தண்ணீர் குடித்தவர் என்பது முதுமொழியாயிற்றே.
பின்பு வல்லி தன் உள்ளக்கருத்தைக் குறியின் வாயிலாக விள்ளச் சொன்னாள். குறவஞ்சியோ வழக்கப்படி முதலில்,
“என்ன குறி யாகிலுகான் சொல்லுவே னம்மே சதுர்
ஏறுவே னெதிர்த்தபேரை வெல்லுவேனம்மே மன்னவர்கள் மெச்சுகுற வஞ்சிநானம்மே யென்றன்
வயிற்றுக்கித் தனைபோதுங் கஞ்சிவாரம்மே பின்னமின் றிக் கூழெனினுங் கொண்டுவா
அம்மேவந்தால் பெரிய குடுக்கை முட்ட மண்டுவேனம்மே தின்ன இலை யும்பிளவு மள்ளித்தா அம்மே கப்பற்
சீனச்சரக்குத் துக்கிணி கிள்ளித்தா அம்மே”
என்று கேட்டு உணவும் வெற்றிலைபாக்கு புகையிலையும் வாங்கி உட்கொண்டாள். ஈண்டு கப்பல் சீனச்சரக்கு என்றால் புகையிலை. அன்றைய தமிழனுக்கும் சீனனுக்கும் நடந்த கப்பல் வாணிகப் பெருக்கை நோக்குங்கள். துக்கிணி புகையிலை என்பது உலக வழக்கை ஒட்டி உள்ளதன்றோ?
பின்பு குறத்தி குறி சொல்லத் தொடங்குகின்றாள். ‘ஏ அம்மே! எல்லா நிமித்தங்களும் (சகுனங்களும்) சரியாய்