பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மிருக இச்சை

காதல், வெறும் மிருக இச்சை; பூர்த்தியாகாத மனப் பிராந்தியில் ஏற்பட்ட போதை.

சமூக இயல்பு

பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம், ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால் பெரிய மீன் ‘குற்றம் செய்கிறாய்!’ என தண்டிக்க வருகிறது. இது தான் சமூகம்!

யாருக்கு உரிமை?

இளமை, மூப்பு, சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரிமையில்லை. எனவே, தெரு விளக்கிற்கும் இப்பொழுது மூப்புப் பருவம்.

உதையும் குத்தும்

பிள்ளையவர்கள் மிகவும் சாது; அதாவது படாடோபம், மிடுக்கு, செல்வம், அகம்பாவம் முதலியனவற்றின் உதைகளையும் குத்துக்களையும் ஏற்று ஏற்று மனமும் செயலும், எதிர்க்கும் சக்தி யையும், தன்னம்பிக்கையையும் அறவே இழந்து விட்டன.

36