இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சகோதரிகளாக நினை!
குற்றத்தின் பாரமே உருவாக இந்திரன் நிற்கிறான். “அப்பா இந்திரா! உலகத்துப் பெண்களைச் சற்று சகோதரிகளாக நினைக்கக்கூடாதா? கெளத முனிவர் கூறுகிறார்.
எப்படி வாசிக்க வேண்டும்?
“சாஷ், இப்பொ அதுதான் வேணும், வாசிக்கிறவாள் எல்லாம், மாடு பருத்திக் கொட்டை தின்கிற மாதிரி எதையானாலும் விதரணை இல்லாமல் வாசிக்கிறா”.
புத்தக வியாபாரம்
இந்த புஸ்தக வியாபாரமே கேப் மாறி ஜாதிக்குத்தான் சரி!
தியாகத்தின் பலிபீடம்
“கொள்கைக்காக நீர் தியாகம் செய்து கொள்ள முயலுகிறீர்; அது வேண்டாம் நான் உமக்குப் போகக் கருவியாகத்தான், உமது தியாகத்தின் பலிபீடமாகத்தான் நீர் கருதுவீர். அது எனக்கு வேண்டாம். நான் காதலைக் கேட்கவில்லை. தியாகத்தைக் கேட்கவில்லை. நான் தேடுவது பாசம்...
37
பு.-3