பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுகமாக இருப்பது எப்படி?

சுகமாக இருக்க விரும்புவது தான் மனித இயற்கை என்பது தகப்பனார் அனுபவம். அதில் இன்பம் கிடையாது என்பதுதான் பையன் சித்தாந்தம். தகப்பனாருக்குப் பையன் நடத்தை. அர்த்தமாகவில்லை.

எது முட்டாள்தனம்?

மனிதன் என்றால், நிதானம் தவறி விடுவது இயற்கை. தவறின நிலையிலேயே நின்று உழன்று கொண்டிருப்பது என்பது படு முட்டாள் தனம்.

சில நிமிஷ உல்லாசம்

சில நிமிஷ நிம்மதிக்காக, சில நிமிஷ உல்லாசத்திற்காக, விலங்கை மீண்டும் நாமே எடுத்துப் பூட்டிக் கொள்வது புத்திசாலித்தனம் இல்லை.

நெருப்பைச் சுற்றி வட்டமிடலாமா?

விட்டில் பூச்சி மாதிரி நெருப்பைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டால் சிறகு தீய்ந்து போகாமல் என்ன செய்யும்?

ஆசை எது?

ஆசை என்று நினைத்துக் கொண்டு சகதிக்குள் காலை விட்டுக் கொள்ள முடியுமா?

38