எண்ணிப் பார்க்கிறேன்...
மாண்பு நிறைந்த மனிதப் பிறவியின் சோதனை மிகுந்த மனித வாழ்க்கையிலே, நித்த நித்தம் எத்தனை, எத்தனையோ கதைகள் நடக்கின்றன!நடந்து காட்டுகின்றன அல்லவா?- எனவே தான், வாழ்க்கை ஒரு கதையாக ஆகிறது; ஆக்கப்படு கின்றது!- அது போலவே, கதையும் ஒரு வாழ்க்கை யாக ஆகிறது ; ஆக்கப்படுகிறது! இந்நிலையிலே தான், வாழ்க்கை எனும் கதையும், கதை ஆகிய வாழ்க்கையும் படைப் பின் த த் துவ மாக மட்டுமல்லா மல், படைப்பின் விதியாகவும் அமைந்து விடுகிறது!
இப் படிப் பட்ட சித்திர விசித் திரமான படைப்பின் தத்துவத்தையும் படைப்பின் விதியையும் உணர்ந்து, அறிந்து தெரிந்து கொள்கின்ற எழுத்துக்கலை ஞர்கள் இரண்டாவது பிரம் மாக்களாகவே மதிக்கப் படுகின்றார்கள்! -
எழுத்தாளர்கள் பாக்கியவான்கள்! .
உண்மைதான்!- நான் பாக்கியவான் :- இரண் டாவது பிரம்மாவாக ஆவதென்பது சாமானியப் பட்ட காரிய மா, என்ன?- ராஜபோகமான அடி நாட்களிலே, பொங்குவிரி காவிரியின் தாய் மடியிலே தவழ்ந்துகொண்டிருக்கின்ற திருச்சிராப்பள்ளியில்ே, நான் பி. ஏ.- இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தபோது தான், என்னுடை முதல் கதை