பக்கம்:நிதர்சனங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iy

வெளியானது; வெளிப்படுத்தப்பட்டது!- பாருக் குள்ளே நல்ல நாடான அருமைப் பாரதம் ஆனந்தச் சுதந்தரம் அடைந்த அப்புனித நன்னாளிலே, எழுத் தாளர் ஆன நான் உண்மையிலேயே பாக்கிய வான் தான் !

இப்போது, நடப்பு உண்மை ஒன்றினையும் சொல்லி விடவேண்டும்! நாடு விடுதலை பெற்ற நேரத்திலே, நான் அடிமை ஆனேன்!- நான் என் இடைய எழுத்துக்கு அடிமையானேன்!

எண்ணிப்பார்க்கின்றேன்!- நான் ஏன் எழுத் தாளன் ஆனேன்?-எனக் குத் தெரிந்த விடை விதியின் பிழை” என்பதுதான்!-ஒ.சிருஷ்டியின் பரம ரகசி யத்தைச் சூட்சுமமாகத் தெரிந்து கொண்ட நான் உண்மையாகவே பாக்கியவான் தானே?

அந்நாளிலே, நான் எழுதிய கரகம்’ என்னும் முதற் கதையைச் சுதேசமித் திரன் ஞாயிறு மலரில் வெளியிட்டவர் சிரஞ்சீவிப் புகழ் கொண்ட நாவலா சிரியர் அமரர் சாண்டில்யன்!-இங்கே, ஒர் உண்மை யையும் சொல்ல வேண்டும்!-நான் எழுதிய முதல் கதையே அச்சுவடிவம் பெற்று விட்டது!

என் தாய்வீடு: “பொன்னி’!-அங்கேதான், என் முதல் நூலாகக் கடல் முத்து வெளியானது; அந்த க் “கடல் முத்து அண்மையில், சரியாக நாற்பு தாண்டுகள் கழித்து, மீண்டும் வெளிப்படுத்தப்பட் டது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கத் தின் பொதுச் செய லாளர் அருள்திரு டாக்டர் தயா ஒனந்தன் ஃபிரான்கிஸ் அவர்களது அன்பு பெரிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/6&oldid=681074" இலிருந்து மீள்விக்கப்பட்டது