பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பாரதிதாசன்


கல்லைப் பிசைந்து
கனியாக்குஞ் செந்தமிழின்
சொல்லை மணியாகத்
தொடுத்தவனும் நீதானோ!

தேவாரப் பாகும்
திருவாசகத் தேனும்
நாவார உண்ணஎம்மான்
நன்மகவாய் வந்தானோ!

நாலா யிரக்கவியின்
நல்லமுதம் உண்டிடமால்
பாலாழி நீங்கியொரு
பாலகனாய் வந்தானோ!

குழந்தை என்பதற்கேற்ப, கவிஞருக்கு இங்கு பாலசுப்பிர மணியனிடத்திலும், பாலகிருட்டிணனிடத்திலும் பக்தி பெருகியிருக்கக் காண்கிறோம். அந்தப் பக்தி தாலாட்டுப் பாட்டிலும் வெளிப்படுகிறது.

புள்ளி மயிலோடு
புனங்காத்து நிற்குமந்த
வள்ளி மணவாளன்
மதலையாய் வந்தானோ!

ஆயர் பதியில்
அற்புதங்கள் செய்துநின்ற
மாயவனே இங்கெமக்கு
மகவாகி வந்தானோ!