இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
"ஹல்ரத் ஈஸா நபி அவர்களின் முன் அறிவிப்புப்படி, ஆண்டவனால் இறுதியாக அனுப்பப்பட்டுள்ள நபி இவர்களே!
"இவர்களுக்கு யூதர்களினால் எந்த இடையூறுகளும் உண்டாகாமல் கவனமாகப் பாதுகாத்து வருவீராக” என்று கூறினார் கிறிஸ்துவத் துறவி.
அதிலிருந்து, அபூதாலிப், பெருமானாரை முன்னிலும் பன்மடங்கு கவனமாகப் பாதுகாத்து வரலானார்.
பெருமானார் அவர்கள் ஹல்ரத் அபூதாலிபு முன் ஷாம் தேசத்துக்குப் பயணமாகச் சென்றபொழுது ஆண்டவனுடைய பெருமையையும் வல்லமையையும் காட்டக் கூடிய பல அரிய காட்சிகள் பெருமானாருக்கு நன்கு புலப்பட்டன.
மலைகள், காடுகள், ஆறுகள், ஏரிகள் ஆகியவைப் பெருமானார் அவர்களின் உள்ளத்தில் என்றும் அகலாத ஓர் உண்மையை உணர்த்தின என்றே கூறவேண்டும்.
“ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்” என்பதை எண்பிக்கும் வகையில் இவற்றை