72
பாரதிதாசன்
காட்சி - 2
(மாப்பிள்ளையின் சாதகம் பார்த்தல்)
(சொறிபிடித்த சொக்குப் புரோகிதனிடம்
வீட்டுக்கார வெள்ளையப்பன் சொல்லுகிறான்:)
இதுதான் ஐயரே என்மகன் சாதகம்:
திருமணம் விரைவில் செய்ய வேண்டும்.
எப்போது முடியும்? எங்கே மணமகள்?
மணமகட்குரிய வாய்ப்பெலாம் எப்படி?
அயலா? உறவா? அணிமையா? சேய்மையா?
பொறுமையாய்ப் பார்த்துப் புகல வேண்டும்.
(மண்ணாங்கட்டி புரோகிதனிடம் கூறுகிறாள் :)
காலையில் வருவதாய்க் கழறி னிரே,
மாலையில் வந்தீர் என்ன காரணம்?
(சொறிபிடித்த சொக்கு சொல்லுகிறான் :)
தெரியா மல்என் பெரிய பெண்ணைத்
திருட்டுப் பயலுக்குத் திருமணம் செய்தேன்;
வட்டிக் கடையில் வயிர நகையைப்
பெட்டி யோடு தட்டிக் கொண்டதால்
சிறைக்குப் போனான். செத்தும் தொலைந்தான்.
கட்டியதாலியைக் கழற்றி எறிந்து
மொட்டைத் தலையுடன் மூதேவி போலப்
பெரியவள் பிறந்தகம் வரநேர்ந்து விட்டது.
சின்னப் பெண்ணைப் பின்னத் தூரில்
கப்பல் கப்பலாய்க் கருவாடேற்றும்
வாசனுக்கு மணம்செய் வித்தேன்.
மணம் முடிந்த மறுநாள் தெரிந்தது