பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி: பன்னிரண்டு தெய்வமாய் மறைந்தாளோ ? நெஞ்சைத் தடவி விட்டுக்கொண்டார் ரீமான் செந்தில் காயகம் அவர்கள். அன்று அந்தியில் கேட்ட தொலைபேசிப் பேச்சு இப் போது அவருள் விசுவரூபம் கொண்டது. 'அந்தப் பேச்சைக் கேட்டதும், என் கைகள் நடுங்கின. இல்லாவிட்டால், ரிinவரும் நழுவியிராது! அந்த நபரின் குறைப் பேச்சையும் கேட்டிருக்கலாம்' என்று ஒரு சமாதானம் பூத்தது. ஆணுல், அச்சமாதானத்தினுல் அவருக்கு என்ன பிரயோசனம்? 'நீங்க யாரென்று முதலிலே சொல்லுங்க!” "ஈவினிங்கூட நான் உங்ளுக்கு டயல் பண்ணினேன். தொடர்ந்து பேச முடியாமல், உங்க தரப்பிலே டிஸ்கனெக்ட்” ஆயிட்டுது. அதுதான் நேரிலேயே வந்திட்டேன்!...” "சரி...விஷயத்துக்கு வாங்க!” "எஸ்.எஸ்... என் பெயர் மோகனசுந்தரம். ஊர்: மதுரை!...” "ஓஹோ!...' காயகம். 麓 என்று வியப்புக் காட்டினர் செந்தில் "உங்க மனைவி மங்களமும் நானும் சின்ன வயசிலே ஒண்ணு வாசிச்சோம். நேசத்தோட பழகினுேம்!...” ஒத்திகை பார்க்கப்பட்ட பேச்சுத் தொனியைப் போலவே, வந்த மனி தரது மொழிகள் பிசிறு தட்டாமல் இருந்தன.