பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

43


பெண்கள் சிறுவீட்டைப்
பேணாதழித்தவர்தம்
கண்கள் சிவக்க வைக்கும்
கண்ணபிரான் நீதானோ!

முடிவில் அழுகின்ற குழந்தையை அழவேண்டாம் என்று சொல்லிப் பாட்டு முடிகிறது. குழந்தைக்குச் சலுகை மாமாவிடம். ஆதலால், மாமா வருவார் என்பதே கடைசியான கூற்று.

சப்பாணி கொட்டித்
தளர்ந்தனையோ அல்லதுன்றன்
கைப்பாவைக் காகக் -
கலங்கி அழுதனையோ?

திந்திக்கும் தேனும்
தினைமாவும் கொண்டுன்றன்
அத்தை வருவாள்
அழவேண்டாம் கண்மணியே.

மாங்கனியும் நல்ல
வருக்கைப் பலாக்கனியும்
வாங்கியுன் அம்மான்
வருவார் அழவேண்டாம்.

கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
ஆராரோ ஆராரோ
ஆரரோ ஆரிவரோ.