இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15
'சிவக்கியான சுவாமிகள் சன்னிதானத்திலே சிற்றம்பல நாடியள் சாஷ்த்திர உரையை அறிக்கை செய்யிறதுக்கு உத்தரவு கட்டளையிட்டது "சுளடுவிடுஞ் ஆடிமாதம் உஇடை சோமவாரம்" என்றொரு குறிப்புள்ளது என அவர்களே குறிப்பிடுதலால், உண்மைநெறி விளக்கத்திற்கு அமைந்த அவ்வுரை சிற்றம்பல நாடிகள் சாத்திரங்களுள் ஒன்றாகிய துகளறுபோதத்தை இணைத்து விளக்கும் முறையில் அமைந்த தென்றும் "எண்ணும் அருள்நூல்’ என்ற பாயிரப் பாடல் உண்மைநெறி விளக்க நூலினைக் குறிப்பதன்றி அந்நூலுக் கமைந்த உரைவிளக்கத்தைத் குறிப்பதென்றும் கொள்ளுதலே நெடுங்காலமாக வழங்கிவரும் நூல்வரலாற்று முறைக்கு ஒத்ததாகும்.