பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் பத்து

21


11. புண்ணுமிழ் குருதி

துறை செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்; ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. இதனாற் சொல்லியது: சேரலாதனின் வெற்றிச் செல்வச் சிறப்பு.

[போரிடையே பகைவரது மார்புகளைப் பிளந்தான். பிளக்கப்பெற்ற அம் மார்புப் புண்களினின்றும் செங்குருதி வெள்ளமாக வழிந்து பெருகி ஓடலாயிற்று. அதனால், கழியின் கருமையான நீரும் தன் நிறத்தில் மாறுபட்டதாய்க் குங்குமக் கலவையைப் போலக் கருஞ்சிவப்பாய் ஆயிற்று. இவ்வாறு போர்க்களத்தை வியந்து கூறிய உவமை நயத்தால் இப்பாட்டிற்குப் ‘புண்ணுமிழ் குருதி’ என்பது பெயராயிற்று.

விகார வகையானே அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தைப் போலாது. உலகினுள்ளே இயற்கைவகையானே இயன்ற மக்களைப் பாடுதலால், இதனைச் ‘செந்துறைப் பாடாண் பாட்டு’ என்றனர். ஒழுகிய ஒசையாற் செல்வதனால் ‘ஒழுகு வண்ணம்’ என்றனர். ஆசிரியப்பா ஆதலின் ‘செந்தூக்கு’ என்றனர்.]

வரைமருள் புணரி வான்பிசிர் உடைய
வளிபாய்க் தட்ட துளங்கிருங் கமஞ்சூல்
நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குடை அவுணர்.ஏமம் புணர்க்கும்
குருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் 5

கடுஞ்சின விறல்வேள் களிறூர்க் தாங்குச்
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறங் திறந்த புண்ணுமிழ் குருதியின்
மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல வரண்கொன்று 10

முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஒக்கலை
பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய வேஎய்
வென்றெறி முழங்குபனை செய்த வெல்போர்
நாரரி நறவின் ஆர மார்பிற் 15