இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“குறள் அறநுட்பங்களை எல்லாம் செய்தி வாசிப்பது போல் எளிதாய் வாசித்து, அறிந்துகொள்ளலாம்” என்று உணர்த்துதற்கே “திருக்குறள் செய்திகள்” என்று எளிய பெயரைச் சூட்டியுள்ளார்.
பேராசிரியர் ரா. சீ. அவர்கள், இதே முறையில் மேலும் பல நூல்களுக்கு விளக்கங்கள், செய்திகள் எழுதியருளினால் கற்றவர், மற்றவர் என்னும் வேற்றுமையின்றி அனைவர்க்கும் பயன் விளையும்.
“இப் பெரும்பணி ஆற்றுதற்கு ஊற்றமும் தேற்றமும் இறைவன் அருளுக” என்று வாழ்த்துவோம்.
7.9.94
சு.ஸ்ரீபால்