9 . பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்
பாதகங்கெல்லாம் அப்பாவம் நீங்கும் பரிகாரமாகிய வாய் உண்டு. செய்ந்நன்றி மறத்தலுக்கோ அஃது இல்லை" என்கின்றான்.
தொடர்ந்து 'உங்கட்கும் அரிக்குலத்தரசனுக்கும் உண்மை பொருந்திய நட்பு உண்டாகும்படிச் செய்த செயல் அடியேனாலன்றோ நிகழ்ந்தது; அந்த நட்பு அறம் அழியுமானால், தப்பும் வழி சிநேகித்தவனான சுக்கிரீவனுக் கேயன்றி செய்வித்தவனான அடியேனுக்கும் உண்டோ?” என்று பேசி வேறு காரணங்களை முன் வைத்து இலக்குவதுை சீற்றத்தைத் தணிவிக்கின்றான்.
செய்ந்நன்றி அறிதலைக் காட்டுவதற்கு இவ்விடமே
- ன்றி பிறிதோர் இடமும் உண்டு. வீடணன்தன் ன்னோன் கும்பகருணனை இராமபிரான் பக்கம் வந்து சரும்படி வேண்டுகின்றான்.
எனக்கவன் தந்த செல்வத்
திலங்கையும் அரசும் எல்லாம்
நினக்குநான் தருவன் தந்துன் , ஏவலின் எளிதின் நிற்பன்"
சொல்லி வேண்டுகின்றான். வேதநாயகனே உன்னைக் கருணையால் வேண்டிவிட்டான். ஆதலால் அவனைக் காணப் போதுவாய் என வேண்டுகின்றான். பொன்னடி இரண்டும் தன் தலைமேல் பூண்டு வேண்டு கின்றான். அதற்குக் கும்பகருணன் மறுமொழியாக,
நீர்க்கோல வாழ்வை நச்சி
நெடிதுநாள் வளர்த்துப் வின்னைப்
போர்க்கோலம் செய்து விட்டாற்கு --
உயிர்கொடாது அங்குப் போகேன்"
49. யுத்த. கும்பகருணன் வதை - 140 5.ே மேற்படி - 155