ரா. சீனிவாசன்
151
வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின்
தந்துவினால் கட்டச் சமைவதொக்கும் பைந்தொடையில்
தேன்பாடுந் தார்நளன்றன் தெய்வத் திருக்கதையை
யான்பாடல் உற்ற இது 6
பாரார் நிடத பதிநளன்சீர் வெண்பாவால்
பேரார் புகழேந்தி பேசினான் - தாரார்
செழியனையும் சென்னியையும் சேரத் திறைகொள்
மொழியின் சுவையே முதிர்ந்து 7
பாண்டவரின் முன்தோன்றல் பார்முழுதும் தோற்றொருநாள்
ஆண்டகையே தூதுவனாய்ச் சென்றவனி - வேண்ட
மறுத்தான் இருந்தானை மண்ணொடும் போய்மாளப்
பொறுத்தான் இருந்தான் புலர்ந்து 8
நாட்டின்கண் வாழ்வைத் துறந்துபோய் நான்மறையோர்
ஈட்டங்கள் சூழ இருந்தானைக்-காட்டில்
பெருந்தகையைக் கண்டார்கள் பேரெழில்தோள் வேந்தர்
வருந்தகையார் எல்லோரும் வந்து 9
கொற்றவேல் தானைக் குருநாடன் பாலணைந்தான்
எற்றுநீர் ஞாலத் திருள்நீங்க-முற்றும்
வழிமுறையே வந்த மறையெல்லாம் தந்தான்
மொழிமுறையே கோத்த முனி 10