இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
212
பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை
புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின்
485
தொடையமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல்
வளைகண் டன்ன வாலுளைப் புரவி
துணைபுணர் தொழில நால்குடன் பூட்டி
அரித்தேர் நல்கியும் அமையான் செருத்தொலைத்து
490
ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தொழித்த
விசும்புசெல் இவுளியோடு பசும்படை தரீஇ
அன்றே விடுக்குமவன் பரிசில் இன்சீர்க்
கின்னர முரலும் அணங்குடைச் சாரல்
மஞ்ஞை யாலு மரம்பயி விறும்பிற்
495
கலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவின்
மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற்
செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறிலங் கருவிய மலைகிழ வோனே.
500