பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


மாந்தர் வீடுகளில் இரவு படர்கையில், மண் மகள் அயர்ந்தே தன் உடலைக் கிடத்துவாள்; துன்பங்களை மறந்தே எண்ணிலா உயிர்களும் உறங்கும்; வானகம் ஒன்றே விழித்திருக்கும். -நூ.பா

இவ் உலகின் மூலை எங்கும் மண்ணில் எழும் பண்ணினைக் காலப் பெண் வேய்ங்குழலில் இசைக்கிறாள். -நூ.பா

ஓ, காற்றே, கடலே, வானே நீங்கள் சேர்ந்தே இன்று இக் கோலாகலம் என்னே! ஆடுக ஊசல், ஆடுகவே. -நூ.பா

அழகிய மாநிலமே, எனது உள்ளம் உன்னைக் கண்டு எத்தனை முறைதான் களிப்புடன் பாடிப் பொங்கிற்று. -நூ.பா

பாவலன் மனத்துள் திகழும் காட்சியே பாவியமாக எழுந்திடும். -நூ.பா

தன்னலம் கொண்ட கொடுமை பிறர்படும் இன்னலைப் பார்த்து நகைக்கிறது. -நூ.பா