பக்கம்:நூறாசிரியம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

நூறாசிரியம்


வாய்ந்தளிக்கு அருளும் தோளினானை - ஆற்றாமை வாய்ந்தவர்கட்கு அருள்செய்யும் தோளையுடையவனை.

ஆற்றாமை அவாய் நிலையால் வந்தது. ஆற்றாமை வாய்ந்தோராவார் நலிவுற்றோர்.

செயற்பாட்டுக்குரியது தோளாதலின் அருள் செய்தல் தோள்மேல் ஏற்றப்பட்டது. உற்றுழி உதவுதலைத் தோள்கொடுத்தல் என்னும் உலக வழக்கும் நோக்குக!

தோய்ந்தோர்க்கு உரித்த மார்பினானை- நட்புப் பூண்டார்க்கு உரியதாகிய நெஞ்சம் உடையவனை.

மனம் ஒன்றுபட்ட நிலையே நட்பாதலின் நட்புப்ண்டார் தோய்ந்தார் எனப்பட்டனர். தோய்தல் ஒன்றுபடுதல்.

குணங்கு உயர் காட்சி-ஆவிகளாகிய சிறுதெய்வ நிலையினும் வேறுபட்டு உயர்ந்த இறைமைக் காட்சியைக் கண்டு. குணங்கு-சிறுதெய்வம்.

வணங்கு உறு வாழ்வின் சான்றோர்க்கு - உலக மக்களால் வணங்கப்பெறும் சான்றோர்க்கு

இனித்த சொல்லினானை- இனிமையளிக்கும் சொல்லைப் பேசுபவனை

ஒருவன் அருளுணர்வும் நல்லொழுக்கமும் உடையானென்றும், இவன் நாட்டுக்கு நலஞ்செய்யும் வினையாளன் என்றும் இன்ன பிற சிறப்புடையானென்றும் நம்பிக்கை கொள்ளுதற்கு இடனான சொல் சான்றோர்க்கு இனிக்குஞ் சொல்.

மேல்வாயினானை என்றது அவன்றன் கல்விச் சிறப்பும் நாநலமும் பற்றியது என்றும், ஈண்டுச் சொல்லினானை என்றது.அவன்றன் ஒழுக்கமும் வினைநலமும் பற்றியதென்றும் கொள்க!

இனி, வாயும் செவியும் தோலும் மார்பும் சொல்லும் உடையானை என்னாது வாயினானை, செவியினானை என்றாங்குத் தனித்தனியே கூறியது இயைபுத் தொடை நோக்கி என்க.

இன்றோர் தவிர்க்கினும் வேண்டும் என் நெஞ்சே - பெற்றோர் தவிர்ப்பினும் என் நெஞ்சு வேண்டுகின்றது.

யான் பெற்றோர் கருத்துக்கு மாறுபட விரும்பவில்லை யாயினும் என்நெஞ்சு எனது கட்டுப்பாட்டிலில்லை என்பாள் போல் யான் வேண்டுவல் என்னாது நெஞ்சின்மேல் ஏற்றிக் கூறினாள்.

இப்பாடல் குறிஞ்சியாகிய அகத்தினையும் வேற்றார் வரைவு நேர்ந்துழி தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது என்னுந்துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/348&oldid=1221206" இலிருந்து மீள்விக்கப்பட்டது