பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
பள்ளிக்கூடத்தில்
முயல் குட்டிகள்

காடு முழுவதும் ஒரே பேச்சாய் இருந்தது. விலங்குகள் ஒன்றை ஒன்று சந்திக்கும்போது விசாரித்துக் கொண்டன.

”கழுதை அக்கா, உன் குட்டியைச் சேர்த்து விட்டாயா?”

”இல்லை குரங்கண்ணா. என் குட்டிக்கு கழுதை வயது ஆகிவிட்டதாம். அந்த ஆசிரியர் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்.”

”புலிக்குட்டியைக் கூட சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டாராமே. எல்லாப் புலிகளும் உறுமிக் கொண்டிருக்கின்றன.”

”அதற்குக் காரணம் தெரியுமோ? புலிக்குட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மான்குட்டியும், ஆட்டுக்குட்டியும் பாடம் படிக்கவா முடியும்.”

இப்படிப்பட்ட பேச்சுகளெல்லாம் அந்தக் காட்டில் பட்டணத்து அல்சேசன் அண்ணாவி தொடங்கியுள்ள பாலர் பள்ளி பற்றித்தான்.