பக்கம்:தந்தையும் மகளும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

99

அப்பொழுது அது அதிக மிருதுவாக ஆகிவிடும். அதனால் அதை மெல்லிய அப்பளமாக இட்டால் அத்துடன் காற்று அடைபட்டுப் போகும். அநேகமாக உலகிலுள்ள பொருள்கள் எல்லாம் சூடு சேர்ந்தால் விரியும் தன்மையுடையன என்பதை அறிவாய். அதுபோல் காற்றும் சூடுபட்டால் விரியும் அல்லவா? அதனால்தான் வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி அதில் அப்பளத்தை இட்டதும் அதில் அடைபட்டுள்ள காற்று விரிகின்றது. அப்பளம் குமிழியாக ஆகிவிடுகிறது.

95அப்பா! முட்டையைப் படுக்க வைத்து உடைப்பது எளிதாயிருக்கிறது, நிற்க வைத்து உடைப்பது கஷ்டமாயிருக்கிறது, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! முட்டையிடம் இந்த வேறுபாடு காணுவதற்குக் காரணம் அது நீளவாட்டில் வளைவு அகன்றும் அகல வாட்டில் குறுகியும் இருப்பதுதான்.

வளைவு நீண்டும் குறுகியும் இருந்தால் அது தூண் போலவே அதிக பலமுடையதாக இருக்கும். அத்தகைய வளைவு தன் மீது வைக்கப் பெறும் கனத்தைத் தாங்கமுடியும்; கனத்தின் காரணமாக முறிந்து விடாது. வளைவு அகலமாகவும் கட்டையாகவுமிருந்தால் கனத்தின் காரணமாக எளிதில் முறிந்துவிடும்.

முட்டையின் நீளவாட்ட வளைவு அகன்று இருப்பதால் தான் முட்டையைப் படுக்க வைத்து உடைப்பது எளிதாயிருக்கிறது. முட்டையின் அகலவாட்டு வளைவு குறுகி யிருப்பதால் முட்டையை நிற்க வைத்து உடைப்பது கஷ்டமாயிருக்கிறது.

வளைவுகள் சம்பந்தமான இந்த உண்மையை உணர்ந்துதான் கட்டடங்களில் வளைவுகள் உண்டாக்க வேண்டியிருந்தால் உயரமாகவும் குறுகலாகவும் கட்டு-