இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலையெல்லாம் இசைபொங்க,
மலையின் சாரற்
கானெல்லாம் ஒலிபொங்கக்,
காட்டாற்றில் நீர்பொங்கக்,
காட்டுப் பூக்கள்
தேனெல்லாம் கால்பொங்கச்,
செழுமருதம் வளம்பொங்கத்,
திண்தோள் வீரர்
ஊனெல்லாம் களிபொங்கக்
கீழ்வானில் உயர்ந்த கதிர்
வாழ்த்து வோமே!
1
கனிமரங்கள் பழுத்திருக்கக்,
கரும்பு பூக்க,
மாடெல்லாம் கொழுத்திருக்க,
வயலெல்லாம் விளைந்திருக்க,
வயலைச் சார்ந்த
வீடெல்லாம் களித்திருக்க,
வேல்விழியார் கனிவாயிற்
பொங்க லோசை
காடெல்லாம் பூத்திருக்க
வந்ததை நன்னாளை
வாழ்த்து வோமே!
2