இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உழவன் :
மழையும் குறைந்தது வானம் வெளுத்தது!
வந்தது புத்தாண்டு பெண்ணே! -தைத்திங்கள்
வந்தது வந்தது. கண்ணே !
உழத்தி : -
வானம்வெளுத்தென்ன?.மழையும்குறைந்தென்ன
வறுமை குறைந்ததோ மச்சான் ? -பசி
வாட்டம் குறைந்ததோ மச்சான் ?
உழவன் :
கன்னல் முதிர்ந்தது! தென்னே பழுத்தது !
கதிரொளி வந்தது பெண்ணே -புதுக்
கதிரொளி வந்தது பெண்னே !
உழத்தி :
கன்னல் முதிர்ந்தென்ன தென்னைபழுத்தென்ன
கட்டத் துணியுண்டோ மச்சான் ?- நொய்க்
கஞ்சிக்கு வழியுண்டோ மச்சான் ?
உழவன் : -
குட்டையும் பூத்தது கொடிசெடி பூத்தன!
குரலெங்கும் கேட்குது பெண்ணே ! -
பொங்கற் குரலெங்கும் கேட்குது பெண்ணே !