பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

20
பிரிவும் பிரிவாற்றாமையும்


தான்பிரீன் மேட்டர் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டிருக்கும் பொழுது, அவனுடைய உயிர்த் தோழன் ஸீன் டிரீஸி சிறிது கூடச் சோம்பியிருக்கவில்லை. ஆஸ்பத்திரியில் கிடந்த தன்னுடைய நண்பனுக்கு எவ்வித ஆபத்தும் நேராமலிருக்க வேண்டுமென்று, அவன் கண்ணில் எண்ணையூற்றிக்கொண்டு கவனித்து வந்தான். பீலர்களோ, பட்டாளத்தார்களோ ஆஸ்பத்திரிப்பக்கம் சென்றால், உடனே சென்று அவர்களை எதிர்த்து போராடவேண்டும் என்பது அவன் தீர்மானம். அக்டோபர் 14ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில் அவன் எதிர்பார்த்திருந்த சோதனை நடந்தது. அவன் அதை முன்கூட்டியே அறிந்து உடனே வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முற்பட்டான்.

அவன் நேராகத் தொண்டர்களுடைய தலைமைக் காரியாலயத்திற்குச் சென்று தன்னுடன் ஒர் உதவிப்படை அனுப்பவேண்டும் என்று கேட்டான். அவர்கள் அவ்வேண்டுகோளுக்கு இசைந்தனர். டிரீஸி பல நண்பர்களை அழைத்தக்கொண்டு மற்றும் சில முக்கியஸ்தர்களையும் கூப்பிடுவதற்காக வெளிப்பட்டான். தான்பிரீனைக் காக்க வேண்டுமென்ற ஆவலினால் அவன் தன்னை அறவே மறந்து விட்டான். டப்ளின் நகரத் தெருக்களில் பகலில் தாராளமாய் நடந்து சென்றான். ஒற்றர்களோ தொண்டர்களில் எவன் தெருவில் வருவான் என்று வேட்டை நாய்போல் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் டிரீஸியைப் பின்தொடர்ந்து கவனித்து வந்தனர். அவன் அவர்களைக் கவனிக்கவேயில்லை. அவசரமாக நடந்து கொண்டிருந்தான்.

131