38 0 லா. க. ராமாமிருதம்
நெற்றிக்கிட்டுக் கொண்டு சுவாமி விளக்கையேற்றி வைத்து எதிரே உட்கார்ந்துவிட்டாள்.
பிறகுதான் எனக்கு உள் பிரக்ஞை வெளியிலும் சிறுகச் சிறுகப் பரவி, நினைவு தொடர ஆரம்பித்தது.
இரண்டே நாள் ஜூரம் அந்த உடலை சக்கையாய் சப்பியெறிந்துவிட்டது. உருவம் கூடச் சிறுத்துவிட்டது. மூச்சு நூலிழைந்தது.
படுத்ததிலிருந்து அந்த வாயினின்று ஒரு முனகல்கூட எழவில்லை. மிருகம்போலவே நோயை மெளனமாய் அனுபவித்துக் கொண்டிருந்தாள். கூந்தல் கட்டிலிலிருந்து படுதாப்போலிறங்கி வீழ்ந்து முகம் கண்ணாடிபோல் ஒரேயடியாய்த் தெளிந்து போயிருந்தது.
அம்மா எழுந்து வந்து மருமகள் நெற்றியில் விபூதியை யிட்டாள். என்னை, "நீ போய் படுத்துக்கொள்' என்றாள். நான் சின்னக் குழந்தையைப்போல் பேசாமல், ரேழித் திண்ணையில் படுத்துக் கொண்டேன்.
மணி ஒன்று, ரெண்டு, மூணு, நாலு. 'அம்பீ!’’
அடி வயிற்றில், நெருப்பை அப்படியே கொட்டிற்று. அதே சமயம், வாசலில் டாக்டரின் காரும் வந்து நின்றது. இருவரும் சேர்ந்து உள்ளே போனோம்.
அரைக் கண்ணாயிருந்த இமைகள் முழுவதும் முடிவிட்டன. டாக்டர் நாடியைப் பிடித்துப் பார்த்தார். நன்றாகப் பரிசோதித்துப் பார்த்தார். அவர் முகம். மலர்ந்தது.
'ஜயம் ஸ்ார். கண்டம் தப்பித்தது ஸார்!’
அம்மா ஏதோ பேச முயன்று கையைத் தூக்கி ஜாடை காட்டினாள். வாய் திறந்து திறந்து கண்கள் பெருகின. சுவாமி பிறையண்டை போய் தடாலென்று விழுந்து விட்டாள்.