இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
❖லா. ச. ராமாமிருதம்
"ஜனனி, அம்மா என்று யாரைக் கூப்பிடு கிறாய்?" ஜனனி பூஜையறையினின்று வெளிப்பட்டாள். அவள் கண்கள் ஒளி வீசின. தன்னுள் தான் மூழ்கி, தன்னை மறந்து கைகளையும் கால்களையும் வீசியாடிக்கொண்டு, மகமாயிப் பாட்டுப் பாட ஆரம்பித்து விட்டாள்:
- “தாயி மகமாயி தாயி மகமாயி
- நெற்றிதனில் உள்ள முத்தை நேத்திரத்தில் இறக்கம்மா
- நேரு மகமாயி நேரு மகமாயி
- நேத்திரத்தில் உள்ள முத்தைத் தாடைதனில் இறக்கம்மா
- தாயி மகமாயி தாயி மகமாயி
- தாடைதனில் உள்ள முத்தைக் கழுத்துதனில் இறக்கம்மா
- காளி மகமாயி காளி மகமாயி
- கழுத்துதனில் உள்ள முத்தை மார்புதனில் இறக்கம்மா
- மாரி மகமாயி மாரி மகமாயி
- மார்புதனில் உள்ள முத்தை வயிறுதனில் இறக்கம்மா
- வாரி மகமாயி வாரி மகமாயி
- வயிறுதனில் உள்ள முத்தைத் தொடைதனிலே இறக்கம்மா
- தாயி மகமாயி தாயி மகமாயி
- தொடைதனிலேயுள்ள முத்தை முட்டிதனில் இறக்கம்மா
- மூது மகமாயி மூது மகமாயி
- முட்டிதனில் உள்ள முத்தைக் காலதனில் இறக்கம்மா
- காளி மகமாயி காளி மகமாயி
- காலதனில் உள்ள முத்தைப் பாதந்தனில் இறக்கம்மா
- பாரி மகமாயி பாரி மகமாயி
- பாதந்தனில் உள்ள முத்தை நிலத்தினிலே இறக்கம்மா
- நித்ய மகமாயி நித்ய மகமாயி”
- ஏதோ பிடியினின்று விடுபட்டதுபோல், குழந்தைக்கு உடல்
உதறியது. எல்லோரும் போய்விட்டதென்று நினைத்துக் கொண்டு, ‘குய்யோ முறையோ’ என்று அடித்துக்கொண்டு