இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாற்கடல்
325
வேட்டை நடந்துகொண்டு தானிருக்கும். ஒருநாள் இப்படியே குண்டுக்கோ அம்புக்கோ, பொட்டென்று இரையானாலும் போச்சு.
அல்லது –
இப்படியே ஆறிக்கொண்டும் அழுகிக்கொண்டும் முழு வயது வாழ்ந்து கடைசியாக ஒரு நாள் அதன் வேளை வந்ததும் மறைவிடம் தேடி உயிரை நீத்தாலும்
போச்சு.
ஆனால்….
எப்படியும் அவைகளின் கம்பீரம் கடைசிவரை அவைகளைக் கைவிடுவதில்லை. மாந்தரைப் போல அவைகளுக்குத் தன்னிரக்கம் கிடையாது.